அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டூடியோக்களின் சுவர்களை உடைத்து, கிராமங்களுக்குள் வந்த தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், கிராமத்து மண்வாசனையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்த மகத்தான இயக்குநராகவும் விளங்கிய பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருந்த பாரதிராஜா, திரையுலகில் உச்சத்தை தொட்ட போதிலும் அரசியலில் மட்டும் காலடி எடுத்து வைக்க மறுத்தவர். அரசியல்வாதியாக மட்டும் ஒரே ஒரு படத்தில் முகம் கட்டியிருந்தும், அரசியல் கட்சிகளின் வாசனையே படமாலேயே இருந்தவர்.

Bharathiraja

அதுவும் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட பலர் நேரடியாக அழைத்தும் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த ஒரு படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தது. அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மண் வாசனை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். ஸ்டூடியோவுக்குள் மட்டுமே இருந்த தமிழ் சினிமாவை கிராமங்கள், வயல்வெளிகள் மற்றும் இயற்கை சூழலுக்கு கொண்டு சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும் என்று திரைப்பட விமர்சகர்கள் கூறுவர்.

அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 2004-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. பாரதிராஜா திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை துணிச்சலாக பேசியவர். மேலும், ஆயுத எழுத்து படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அரசியலுக்கு வர மறுத்ததற்கான காரணத்தை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக கூறியிருந்தார்.

2022-ம் ஆண்டு நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாக்கு நடைபெற்ற பாராட்டு விழாவையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாரதிராஜா, தனது அரசியல் குறித்த நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.
அப்போது பேசிய பாரதிராஜா, "நான் உளறுவாயன். அதனால்தான் அரசியலுக்கு போகவில்லை. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலர் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

மேலும், "செத்தாலும் திரைக் கலைஞனாகத்தான் சாக வேண்டும். அரசியல்வாதியாக அல்ல" என்று ஜெயலலிதாவிடமே நேரடியாக தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார். திரைப்படம் தான் தனது வாழ்க்கை, கலை தான் தனது அடையாளம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த பாரதிராஜா, அரசியல் அதிகாரத்தை விட படைப்புலகையே தேர்வு செய்தார். அதனால் தான் பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும் அரசியல் களத்தில் குதிக்காமல், இறுதி வரை திரையுலகின் மனிதராகவே திகழ்ந்தார்.

இன்று அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் அரசியலிலும், சினிமாவிலும் இன்னும் பிற துறைகளிலும் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் கூட அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜா என்ற கலைஞன் மரணித்து ஆனால், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், படங்கள் மற்றும் தமிழ் மண்ணின் மண்வாசனையை உலகிற்கு அறிமுகப்படுத்திய அவரது படைப்புகள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+