அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!
சென்னை: ஸ்டூடியோக்களின் சுவர்களை உடைத்து, கிராமங்களுக்குள் வந்த தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், கிராமத்து மண்வாசனையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்த மகத்தான இயக்குநராகவும் விளங்கிய பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருந்த பாரதிராஜா, திரையுலகில் உச்சத்தை தொட்ட போதிலும் அரசியலில் மட்டும் காலடி எடுத்து வைக்க மறுத்தவர். அரசியல்வாதியாக மட்டும் ஒரே ஒரு படத்தில் முகம் கட்டியிருந்தும், அரசியல் கட்சிகளின் வாசனையே படமாலேயே இருந்தவர்.

அதுவும் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட பலர் நேரடியாக அழைத்தும் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த ஒரு படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தது. அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மண் வாசனை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். ஸ்டூடியோவுக்குள் மட்டுமே இருந்த தமிழ் சினிமாவை கிராமங்கள், வயல்வெளிகள் மற்றும் இயற்கை சூழலுக்கு கொண்டு சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும் என்று திரைப்பட விமர்சகர்கள் கூறுவர்.
அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 2004-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. பாரதிராஜா திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை துணிச்சலாக பேசியவர். மேலும், ஆயுத எழுத்து படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அரசியலுக்கு வர மறுத்ததற்கான காரணத்தை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக கூறியிருந்தார்.
2022-ம் ஆண்டு நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாக்கு நடைபெற்ற பாராட்டு விழாவையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாரதிராஜா, தனது அரசியல் குறித்த நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.
அப்போது பேசிய பாரதிராஜா, "நான் உளறுவாயன். அதனால்தான் அரசியலுக்கு போகவில்லை. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலர் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
மேலும், "செத்தாலும் திரைக் கலைஞனாகத்தான் சாக வேண்டும். அரசியல்வாதியாக அல்ல" என்று ஜெயலலிதாவிடமே நேரடியாக தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார். திரைப்படம் தான் தனது வாழ்க்கை, கலை தான் தனது அடையாளம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த பாரதிராஜா, அரசியல் அதிகாரத்தை விட படைப்புலகையே தேர்வு செய்தார். அதனால் தான் பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும் அரசியல் களத்தில் குதிக்காமல், இறுதி வரை திரையுலகின் மனிதராகவே திகழ்ந்தார்.
இன்று அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் அரசியலிலும், சினிமாவிலும் இன்னும் பிற துறைகளிலும் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் கூட அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜா என்ற கலைஞன் மரணித்து ஆனால், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், படங்கள் மற்றும் தமிழ் மண்ணின் மண்வாசனையை உலகிற்கு அறிமுகப்படுத்திய அவரது படைப்புகள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.
-
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர்












Click it and Unblock the Notifications