மாஜி ரவுடி- மாட்டு தலை மூலம் மத கலவர முயற்சி-சென்னையில் கொல்லப்பட்ட பாஜக பாலச்சந்தரின் ஷாக் பின்னணி
சென்னை: சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்திரன், 3 ஆண்டுகள் முன்பு வரை போலீசாரின் ரவுடி பட்டியலில் இருந்தவர்; 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டு தலையை வெட்டி பிற மதத்தினர் மீது பழி போட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சி செய்து பிடிபட்டவர்; போலீஸ் பாதுகாப்புக்காக தம்மை பிற மதத்தினர் தாக்கிவிட்டதாக 2 முறை நாடகமாடியவர் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். தமிழக பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார். சென்னை சிந்தாதரிப்பேட்டையில் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் பாலச்சந்தர். இது முன்விரோதம் காரணமாக நடைபெற்ற படுகொலை என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படுகொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

கட்ட பஞ்சாயத்து
வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்தர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மக்கள் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்தார். 2017-ம் ஆண்டு பாலச்சந்தர் மீது சென்னை சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ், போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், பாலச்சந்தர் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார். எனக்கும் என் உறவினர் முரளி என்பவருக்குமான தொழில் பிரச்சனையில் தலையிட்டு பணம் கேட்டு மிரட்டி வருகிறார்.

மதகலவர முயற்சி
அத்துடன் சிந்தாதரிப்பேட்டை இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் தாமே மாட்டு தலை ஒன்றை வைத்துவிட்டு பிற மதத்தினர்தான் அதை வீசியதாக போலீசில் பொய் புகார் கொடுத்தார். தமக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதற்காக இப்படி நாடகமாடியதாக பாலச்சந்தர் என்னிடமே கூறினார். இது தொடர்பான ஒலிப்பதிவையும் நான் இணைத்துள்ளேன் என கூறியிருந்தார்.

நாடகமாடியது அம்பலம்
பிரகாஷ் கொடுத்த புகாரை ஆய்வு செய்த போலீசார், பாலச்சந்தர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்தனர். மேலும் போலீஸ் பாதுகாப்புக்காக தம்மை 2 முறை பிற மதத்தினர் தாக்கிவிட்டதாகவும் பாலச்சந்தர் நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனால் அப்போது போலீசார் பாலச்சந்தரை கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

ரவுடி லிஸ்ட்டில்..
இவ்வழக்குகளில் சிறையில் இருந்து வெளியே வந்த பாலச்சந்தர் பின்னர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த நிலையில் 2019-ம் ஆண்டு சென்னை சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்து பாலச்சந்தர் பெயர் நீக்கப்பட்டது. அதேநேரத்தில் மாமூல் வசூலிப்பது, கட்ட பஞ்சாயத்து தொடர்பாக சிந்ததாரிப்பேட்டையில் சிலருடன் பாலச்சந்தருக்கு முன்விரோதம் இருந்தும் வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தால்தான் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்கிறது போலீஸ் வட்டாரங்கள். இதனிடையே பாலச்சந்தர் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் சிந்ததாரிப்பேட்டை பிரதீப் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications