Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெண்டிலேட்டர் நோயாளிகள் தப்பியது எப்படி? கிண்டி மருத்துவமனையில் மின்தடை ஏன்? சுகாதார செயலர் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 3 மணிநேரமாக மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில் மின்தடை ஏற்பட்டது ஏன்? நோயாளிகளை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.

chennai guindy hospital power cut

இந்த மருத்துவமனையில் தற்போது 400க்கும் அதிகமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் மருத்துவமனையில் இன்று மாலை 6.45 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. மின்மாற்றியில் இருந்து மருத்துவமனைக்கு வரும் வயர் எரிந்தது மற்றும் மருத்துவமனையின் ஜெனரேட்டரில் வயர் எரிந்தது உள்ளிட்டவற்றால் மின்சாரம் உடனடியாக வழங்க முடியவில்லை.

இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இறுதியாக 3 மணிநேரம் கழித்து இரவு 10 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது.

முன்னதாக இதுபற்றி அறிந்தவுடன் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மீண்டும் மின்இணைப்பு வழங்கும் பணியை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் அவர் அறிவுரைகள் வழங்கினார்.

அதோடு மின்தடை மற்றும் நோயாளிகளை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மெயின் கேபிள் தீவிபத்து மருத்துவமனை மின்சாரத்துக்கான மின்சப்ளை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜெனரேட்டர் கேபிளும் எரிந்துள்ளது. அதனால் மருத்துவமனைக்கு மின்சாரம் தடைப்பட்டது. இந்த மருத்துவமனையில் 490 நோயாளிகள் உள்ளனர்.

இதில் 15 பேர் வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்தனர். அவர்களுக்கு தனியாக ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை செல்கிறது. அதில் எந்த பாதிப்பும் இல்லை. இப்போது வெண்டிலேட்டர் மற்றும் ஐசியூவில் உள்ள 15 நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்து கொள்வது தான் முதல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் நன்றாக உள்ளனர்.

இப்போது மெயின் மருத்துவமனைக்கான மின்சாரத்தை மீண்டும் வழங்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 மணிநேரத்தில் மெயின் லைன் வழியாக மருத்துவமனைக்கு மின்இணைப்பு என்பது வழங்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+