ஜோதிமணிக்கு வந்த துணிச்சலை பார்த்தீங்களா.. "மட்டன், ஹிஜாப்".. டக்கென திரும்பிய பாஜகவினர்..!
பாஜக ஆட்சியை விமர்சித்து ஜோதிமணி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்தது இங்கும் நடக்கும் என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ள கருத்துக்கு, பாஜகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது... உலகம் முழுக்க கடன்களை வாங்கிக் குவித்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள், சொந்த நாட்டு மக்களிடமிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.
உலகமெல்லாம் வாங்கி முடித்துவிட்டு, இப்போது கடன்களை அடைக்க இந்தியாவிடம் கடன் வாங்க ஆரம்பித்துள்ளனர்...

விழிபிதுங்கிய மக்கள்
எனினும், பொருளாதார சீர்குலைவால் இலங்கையில் பணவீக்கம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது... விலைவாசி விண்ணை எட்டிவிட்டது.. மக்கள் விழிபிதுங்கி தவிக்கிறார்கள்.. நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களும் நடந்து வருகின்றன. தினம் தினம் கலவரமாக அங்கு நடந்து வருகிறது.. ஆட்சியாளர்களுக்கும் எதிராக களத்தில் குதித்துள்ள மக்கள், அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலகவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. ஆனால் ஒடுக்கப்பார்த்த அரசின் எல்லா முயற்சிகளும் படு தோல்வியிலேயே முடிந்துள்ளன.

பாஜக அரசு
இப்படிப்பட்ட நிலைமை கண்டிப்பாக இந்தியாவிலும் வரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.. காரணம், மதத்தை வைத்து சிலர் மக்களிடையே தொடர்ந்து பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகள் வெடிக்கும் என்று அறுதியிட்டு சொல்கிறார்கள்.. இப்போதே இந்தியாவில் பொருளாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது என்றும், அதை மறைக்கவே மதத்தை வைத்து அரசியல் செய்யும் முயற்சி நடப்பதாகவும், குற்றச்சாட்டுகள் வெடித்து கொண்டிருக்கின்றன.

பெட்ரோல் டீசல்
நாளுக்கு நாள் உயரும் விலைவாசி, பெட்ரோல் டீசல் உயர்வு, கேஸ் விலை உயர்வு, சுங்கக்கடட்டணம் உயர்வு என்ற விலைவாசிகளை பார்த்து மிரண்டு போயுள்ளனர்.. இதுபோதாமல், ஹிஜாப் விவகாரம், மசூதிகளில் பாங்கு ஒலிக்கும் ஒலிபெருக்கிகளுக்கு தடை, அசைவம் சாப்பிடகூடாது, போன்ற மத விஷயங்களையும் பார்த்து கடுமையான அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஜோதிமணி ஒரு ட்விட் போட்டுள்ளார்..

மட்டன் - சிக்கன்
அதில், "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப், அசைவ உணவு தடை போன்ற மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறது. இதே மத, இனவாத அரசியல்தான் இலங்கை மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடச் செய்திருக்கிறது. அதுவே இங்கும் நடக்கும்" என்று ஜோதிமணி எச்சரித்துள்ளார். ஜோதிமணி சொன்ன இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்..

பாஜக கேள்வி
பலரும் இந்த ட்வீட்டை ஆமோதித்து தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.... ஆனால் பாஜகவினரோ, ஜோதிமணியின், திமுக அரசு சொத்து வரியை உயர்த்தி இருக்காங்களே.. அதை பற்றியும் சொல்லுங்க.. ஏன் அமைதியாக இருக்கறீங்க?" என்று பதில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் ஜோதிமணி ட்விட்டரே படுபிஸியாக காணப்படுகிறது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications