இப்போ வேண்டாங்க! பசும்பொன்னில் உற்று பார்த்த கண்கள்! மறுத்துவிட்டு சட்டென காரில் ஏறிய எடப்பாடி! ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை; பசும்பொன்னில் இன்று எடப்பாடி பழனிசாமி வேக வேகமாக காரில் ஏறி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழா இன்று தென் மாவட்டங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தென் மாவட்டங்களுக்கு அரசியல் தலைவர்கள் படையெடுத்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பசும்பொன்னிற்கு சென்றார்.

Why did Edappadi Palanisamy leave with out answering questions in Pasumpon Muthuramalinga Devar Guru Poojai

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்து வருகிறது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றுள்ளார். செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி உடன் இன்று முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில் உடன் இருந்தனர்.

என்ன சொன்னார்?: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அதில், சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான்; சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர்.

இது சாதாரண மண் கிடையாது. இது தேவர் பிறந்த பூமி. தெய்வமாகி அவர் வாழும் பூமி. இது தெய்வீக மண். அவரை வணங்குவது மிகப்பெரிய பாக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக காலத்தில் தேவருக்கு சிலையை ஜெயலலிதா வைத்தது தொடங்கி பல விஷயங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்றுவிட்டார்: அவர் பேசுகையில் அங்கங்கே அவரை பல்வேறு அமைப்பினர் சிலர் கவனித்தபடி இருந்தனர். அதிமுகவை சேராதா பலரும் கூட அங்கே இருந்தனர். இதனால் பாதுகாப்பு அச்சம் நிலவியது. இதையடுத்து.. அங்கிருந்து உடனே எடப்பாடி கிளம்பினார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றதும்.. இல்லைங்க.. இப்போ வேண்டாங்க.. இது நல்ல நாள்.. இங்கே அரசியல் பேச வேண்டாம்.. என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

அவசரமாக அவர் அங்கிருந்து கிளம்பி சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பசும்பொன்னிற்கு சென்றார். குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அதில், "இன்னார்க்கு மட்டுமே இது" என்று சொல்வது ஆரியம். 'எல்லார்க்கும் எல்லாம் உண்டு" என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை, இந்த உண்மையை தயவுசெய்து நம்முடைய ஆளுநர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. மாளிகைக்கு வெளியில் தெருவில் வீசப்பட்டிருக்கிறது. அதனுடைய CCTV காட்சிகள் எல்லாம் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகை நிருபர்களை அழைத்து வெட்டவெளிச்சமாக காண்பித்திருக்கிறார்கள். ஆளுநர் மாளிகையிலிருந்து திட்டமிட்டு இந்தப் பொய் பரப்பப்படுகிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையும் பி.ஜே.பி கட்சியின் அலுவலகமாக மாறியிருக்கிறது. அதுதான் வெட்கக்கேடு, என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+