திடீரென ஜெர்மனிக்கு பறந்த ராஜாத்தி அம்மாள்.. கூடவே சென்ற கனிமொழி.. நேற்று இரவு என்ன நடந்தது?
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு சென்றார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள். இவருக்கு செரிமான மண்டலத்தில் கோளாறு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி வயிற்றுவலி பிரச்சனையும் இருந்து வருகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..திடீரென வந்த அழைப்பால் பரபரப்பு.. இரவில் பேசிய இளைஞர் யார்?
சிகிச்சை
தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களாக ராஜாத்தி அம்மாள் அங்கே சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது அங்கேயே தங்கியும், சில சமயம் வீட்டில் இருந்தும் சிகிச்சை பெற்றார். ஆனால் இவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இடையில் கொஞ்சம் குணமடைந்த உடல்நிலை சமீபத்தில் மீண்டும் மோசமாகி இருக்கிறது. உணவு உட்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
உணவு
அவ்வப்போது வாந்தி எடுப்பது, சாப்பாடு செரிமானம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரின் உடல்நிலையில் இந்த முறை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி அழைத்து செல்லும்படி இவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனி
இதையடுத்து ராஜாத்தி அம்மாள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு சென்றார். எம்பி கனிமொழியும் ராஜாத்தி அம்மாளுடன் ஜெர்மனி சென்றார். நேற்று இரவு இவர்கள் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர். ஜெர்மனியில் அடுத்த சில நாட்களுக்கு தங்கி ராஜாத்தி அம்மாள் சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. அங்கு அவருக்கு குடல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கனிமொழி
நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி.. அம்மாவின் உடல்நிலை காரணமாக ஜெர்மனி செல்கிறோம். அங்கே அவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்படும் என்று கனிமொழி குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக ராஜாத்தி அம்மாள் திட உணவுகளை உட்கொள்ளாமல் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்தார். பழசாறு, சூப் போன்ற திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்தார். இதையடுத்தே தற்போது ஜெர்மனிக்கு மேல் சிகிச்சைக்கு அவர் சென்றுள்ளார்.