Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிவி தினகரனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வத்தை ஏற்க மறுப்பதன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனும், ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக சவாலாக இருந்தவர்கள் ஆனால், டிடிவி தினகரனை "பழைய கசப்புகளை மறந்து" ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக "நோ" சொல்வதற்கு பின்னால் மிகத்தெளிவான அரசியல் கணக்குகள் உள்ளது

அதிகாரப் போட்டி

டிடிவி தினகரன் என்பவர் ஒரு தனி அரசியல் கட்சியின் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ) தலைவர். அவர் கூட்டணிக்கு வந்தாலும், அதிமுகவின் உட்கட்சி அதிகாரத்தில் தலையிட முடியாது. அவர் ஒரு வெளி சக்தியாக மட்டுமே இருப்பார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் அப்படி அல்ல கட்சியை வழிநடத்தத் துடிக்கும் ஒரு "இணை அதிகாரம்". எனவே ஓ பன்னீர்செல்வம் உள்ளே வந்தால் மீண்டும் 'ஒருங்கிணைப்பாளர்', 'இணை ஒருங்கிணைப்பாளர்' என்ற இரட்டைத் தலைமைப் பேச்சு எழும். இது எடப்பாடியின் ஒற்றைத் தலைமை பிம்பத்தை உடைக்கும். எடப்பாடி பழனிசாமி தயங்க இதுவே முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.

Why Eadppadi palanisamy welcomes TTV dhinakaran but firmly rejects OPS The hidden political motives


சட்டப் போராட்டங்களும் "துரோக" முத்திரை

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த மோதல் வெறும் அரசியல் மோதல் கிடையாது; அது உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்ற ஒரு கடுமையான சட்டப் போர் ஆகும். அதிமுகவின் சின்னம் மற்றும் கட்சிப் பெயரையே முடக்க ஓபிஎஸ் முயற்சித்தார் என்பது எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு ஆகும். கட்சியை விட்டுத் தன்னை நீக்கியதை ஓபிஎஸ் சட்ட ரீதியாக எதிர்த்ததும், அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்ததும் மன்னிக்க முடியாத "தனிப்பட்ட துரோகமாக" எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார்.

வாக்கு வங்கி கணக்கு

தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகள் சிதறுவதைத் தடுக்க தினகரன் தேவை. அவரிடம் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் (சுமார் 5-8%) கைவசம் உள்ளன. ஓபிஎஸ்-க்கு சமூக ரீதியான செல்வாக்கு இருந்தாலும், கடந்த சில தேர்தல்களில் அவரது சொந்த செல்வாக்கு குறைந்துவிட்டதாக எடப்பாடி கருதுகிறார். "தினகரன் இருந்தால் ஓபிஎஸ் தேவையில்லை, ஏனெனில் தினகரனே அந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைத்து விடுவார்" என்பது எடப்பாடியின் கணக்காக உள்ளது.


பாஜகவின் அழுத்தம் மற்றும் எடப்பாடியின் பிடிவாதம்

பாஜக மேலிடம் ஓபிஎஸ் மற்றும் தினகரன் இருவரையும் சேர்க்கச் சொல்லி எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்தது. தினகரனை ஏற்றுக் கொண்டதன் மூலம், பாஜகவின் பேச்சை ஓரளவுக்குக் கேட்டது போலவும் ஆகிவிட்டது. அதே சமயம் ஓபிஎஸ்-ஐத் தவிர்ப்பதன் மூலம், "கட்சியின் கட்டுப்பாடு என்னிடம்தான் இருக்கிறது" என்பதை டெல்லிக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.

தொண்டர்களின் மனநிலை

அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலருக்கு ஓபிஎஸ் மீது கடும் அதிருப்தி இருக்கிறது. அவர் அவ்வப்போது திமுக தலைவர்களுடன் காட்டும் மென்மையான அணுகுமுறையை அதிமுக தொண்டர்கள் விரும்புவதில்லை. தினகரன் கடுமையாக திமுகவை விமர்சிப்பதால் அவரை ஏற்றுக்கொள்வது தொண்டர்களுக்கு எளிதாக இருக்கிறதாம்.

வாய்ப்பில்லை ஏன்

சுருக்கமாகச் சொன்னால் தினகரன் என்பவர் ஒரு "கூட்டணி நண்பன்"; ஆனால் ஓபிஎஸ் என்பவர் எடப்பாடியின் "நாற்காலியைப் பறிக்க நினைக்கும் போட்டியாளர்". நண்பனைச் சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் போட்டியாளரை வீட்டுக்குள் அனுமதிக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஒருவேளை பாஜக மிகக்கடுமையான அழுத்தம் கொடுத்தால், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி மனம்மாறி ஓபிஎஸ்-ஐயும் கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு தான் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+