Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

66 ப்ளஸ் 63.. துள்ளி குதிக்கும் எடப்பாடி.. டெல்லியிலிருந்து திரும்பியதும்.. இன்றே அடுத்த மெகா மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று மீண்டும் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் இருந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் செல்கிறார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. மாஜி அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

ஆளும் திமுக அமைச்சர்கள் குறித்த புகார் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வாசித்ததாக கூறப்படுகிறது.

புகார் பட்டியல்

புகார் பட்டியல்

அதன்படி ஆளும் கட்சியில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீது உள்ள புகார்கள். அவர்கள் எடுத்த டெண்டர்கள், அவர் செய்த ஒப்பந்தங்கள் குறித்து புகார் பட்டியலை வாசித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஆக்சன் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் எடப்பாடி. அதோடு இதற்கான லிஸ்ட் ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தாக கூறப்படுகிறது. இது போக ஓ பன்னீர்செல்வம் பற்றியும் அவர் புகார் சொல்லி இருக்கிறார்.

 ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அதிமுகவிற்கு எதிராக செயல்படுகிறார். மாஜி அமைச்சர்கள் பற்றி ஸ்டாலினுக்கு தகவல் கொடுப்பதே ஓ பன்னீர்செல்வம்தான் என்று எடப்பாடி பழனிசாமி புகார் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் டெல்லியில் இருந்து திரும்பி வந்த எடப்பாடி பழனிசாமி மிகவும் உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் அமித் ஷா இவரிடம் சொன்ன சில விஷயங்கள் காரணமாக எடப்பாடி உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சாதகமான பதில்

சாதகமான பதில்

முக்கியமாக அமித் ஷா, எடப்பாடிக்கு ஆதரவாக சில விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு காரணமாக சந்தோஷத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று மீண்டும் செல்கிறார். டெல்லியில் இருந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் செல்கிறார். கடந்த 8ம் தேதி அவர் இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக அலுவலகம் சென்றார். அவரை வரவேற்க அதிமுக அலுவலகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன,. முன்னதாக ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அதற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

வெற்றி

வெற்றி

இந்த வழக்கில் எடப்பாடி தரப்பே வென்றது. இதன்பின் எடப்பாடி அதிமுக அலுவலகம் வந்த போது, இந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் 63 பேர் இருந்தனர். இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர்கள் 66 பேர் இருந்தனர். இதன் மூலம் தனக்கு முழு எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது என்பதை எடப்பாடி நிரூபித்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று மீண்டும் எடப்பாடி அதிமுக அலுவலகம் வருகிறார். அதிமுக அலுவலகத்தில் இன்று முக்கியமான ஆலோசனைகளை எடப்பாடி செய்ய உள்ளார். சில எம்எல்ஏக்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் அலுவலகத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+