ஒதுங்கியே இருந்த விஜயபாஸ்கர்.. வெளியே கூட வரலையே.. இப்போ பாருங்க திடீர்ன்னு ரெய்டு.. அலறிய அதிமுக
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது.
அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி நேற்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

அதன்படி,
1 ) வட சென்னை - ஆர்.மனோ
2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
4 ) அரக்கோணம் - A.L.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி - கஜேந்திரன்
7 ) விழுப்புரம் (தனி) - J.பாக்யராஜ்
8 ) சேலம் - P.விக்னேஷ்
10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11 ) கரூர் - தங்கவேல்
12 ) சிதம்பரம் (தனி) - M.சந்திரகாசன்
13 ) நாகை - சுர்ஜித் சங்கர்
14 ) மதுரை - டாக்டர் P. சரவணன்
15 ) தேனி - V.T.நாராயணசாமி
16 ) ராமநாதபுரம் - பா. ஜெயபெருமாள்
இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூட்டணி முறிவு: அதிமுக - பாஜக கூட்டணி கண்டிப்பாக நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவும் பாமக உடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சியினரை குறி வைத்து பாஜக சார்பாக அமலாக்க துறையினர் மூலம் மிரட்டி வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையில்தான் விஜயபாஸ்கர் ரெய்டில் சிக்கி உள்ளார்.
ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர்: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது. விஜயபாஸ்கர் அதிமுக கூட்டணி தொடர்பான மீட்டிங் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல் கூட்டணி அறிவிப்பு தொடர்பான மீட்டிங்கிலும் கலந்து கொள்ளவில்லை. விஜயபாஸ்கர் தொடர்ந்து ஒதுங்கியே இருந்த நிலையில்தான் அவர் இப்போது ரெய்டில் சிக்கி உள்ளார்.
ரெய்டு: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு என்று 2022-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அளித்த தகவலின் பேரில் தற்போது, அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications