ஒதுங்கியே இருந்த விஜயபாஸ்கர்.. வெளியே கூட வரலையே.. இப்போ பாருங்க திடீர்ன்னு ரெய்டு.. அலறிய அதிமுக
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது.
அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி நேற்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

அதன்படி,
1 ) வட சென்னை - ஆர்.மனோ
2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
4 ) அரக்கோணம் - A.L.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி - கஜேந்திரன்
7 ) விழுப்புரம் (தனி) - J.பாக்யராஜ்
8 ) சேலம் - P.விக்னேஷ்
10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11 ) கரூர் - தங்கவேல்
12 ) சிதம்பரம் (தனி) - M.சந்திரகாசன்
13 ) நாகை - சுர்ஜித் சங்கர்
14 ) மதுரை - டாக்டர் P. சரவணன்
15 ) தேனி - V.T.நாராயணசாமி
16 ) ராமநாதபுரம் - பா. ஜெயபெருமாள்
இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூட்டணி முறிவு: அதிமுக - பாஜக கூட்டணி கண்டிப்பாக நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவும் பாமக உடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சியினரை குறி வைத்து பாஜக சார்பாக அமலாக்க துறையினர் மூலம் மிரட்டி வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையில்தான் விஜயபாஸ்கர் ரெய்டில் சிக்கி உள்ளார்.
ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர்: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது. விஜயபாஸ்கர் அதிமுக கூட்டணி தொடர்பான மீட்டிங் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல் கூட்டணி அறிவிப்பு தொடர்பான மீட்டிங்கிலும் கலந்து கொள்ளவில்லை. விஜயபாஸ்கர் தொடர்ந்து ஒதுங்கியே இருந்த நிலையில்தான் அவர் இப்போது ரெய்டில் சிக்கி உள்ளார்.
ரெய்டு: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு என்று 2022-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அளித்த தகவலின் பேரில் தற்போது, அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications