அரசு பஸ்களில் தமிழ்நாடு என போஸ்டர் ஒட்டும் போராட்டம் அதிகரிப்பு.. பின்னணி என்ன? பெயர் மாற்றம் ஏன்?
சென்னை: அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாததைக் கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அரசுப் பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 2012-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, பேருந்துகளின் பெயர்களை எளிதாகப் படிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது போராட்டம் வெடித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் "தமிழ்நாடு" என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியதோடு, அதுகுறித்த கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி, தருமபுரி, காஞ்சிபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்களை ஒட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தமிழ் அமைப்புகளால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசு பேருந்துகளில் அந்தந்த மாநிலங்களின் பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயர் இடம்பெறவில்லை என்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
ஏற்கனவே இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தபோது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 2012 கால கட்டத்திலேயே அவர் துவக்கி வைத்த பேருந்திலேயே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று தான் இருக்கிறது.
ஏனெனில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என்பது நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன்பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின்போது மாற்றப்பட்டது." எனத் தெரிவித்திருந்தார்.
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications