Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியா நடக்குது? அதிமுகவில் ஜெயக்குமார் அடித்து சொன்னாரே! நிர்மல் குமார் வெளியேறியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு நேற்று ஒரே நாளில் இரு வேறு கட்சிகளில் இருந்து முக்கியமானவர்கள் இணைந்துள்ளனர். இவர்களில் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவார் என்பது கடந்த சில தினங்களாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுகவை சேர்ந்த நிர்மல் குமார் இணைந்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

பாஜகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்தவர் நிர்மல் குமார். இவருக்கும் அங்கு கட்சி தலைமைக்கு நெருக்கமானவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் அக்கட்சியில் இருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியேறி அதிமுகவில் இணைந்தார்.

nirmal kumar vijay tvk

அதிமுகவிலும் நிர்மல் குமாருக்கு ஐடி பிரிவின் இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. நிர்மல் குமாரை எப்போதும் சமூகவலைதளங்களை திறமையாக கையாள்வதில் சிறந்தவர். அது போல் சிறந்த வியூக வகுப்பாளராகவும் அறியப்பட்டவர்.

இதை அவர் எத்தனையோ தருணங்களில் நிரூபித்தும் உள்ளார். அது போல் எடப்பாடி பழனிசாமியின் குட் வில் புக்கிலும் இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் நிர்மல் குமாரின் எக்ஸ் வலைதள பக்கத்தில் இரட்டை இலை சின்னம் நீக்கப்பட்டிருந்து. அத்துடன் அவரது பயோவில் அதிமுகவின் பொறுப்புகளும் நீக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து அவர் தவெகவில் இணைகிறார் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு நிர்மல் குமார் வந்திருந்தார். அங்கு அவரை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார்.

இதையடுத்து அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். ஏற்கெனவே பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த இவர் ஏன் தவெகவில் இணைந்தார் என்ற கேள்வி எழுந்தது. அதாவது ஐடி பிரிவின் புதிய தலைவராக வந்துள்ள கோவை சத்யனுடன், நிர்மல் குமாருக்கு ஒத்து போகவில்லை என கூறப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவர் தவெகவில் இணைந்ததற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நிர்மல் குமார், அதிமுகவில் இருந்து விலகியது ஏன் என்றால் அதிமுக- பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தப்பட்டு வருகிறது.

மறைமுகமாக நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்துவிட்டன. இதை தெரிந்து கொண்ட நிர்மல் குமார், அப்படி ஒன்று நடந்தால் பாஜகவிலிருந்து யாருக்காக வெளியேறினோமோ அவருடனேயே மீண்டும் வேலை செய்யும் சூழல் வரும் என்பதால்தான் அவர் தவெகவில் இணைந்துவிட்டார் என பிரியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+