அரிகொம்பன் யானை - பொய் வீடியோவை வெளியிட்டு டெலிட் செய்த தமிழ்நாடு வனத்துறை அதிகாரியால் சர்ச்சை!
சென்னை: அரிகொம்பன் யானை புல்தரையில் படுத்து உறங்குவதாக வெளியிட்ட வீடியோ வேறு யானை தொடர்பானது என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியதால் அந்த வீடியோவை நீக்கி இருக்கிறார் தமிழ்நாடு வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு.
கேரளாவில் 10 பேரை மிதித்து கொன்றதால் அரிகொம்பன் யானை பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் கொண்டுவந்துவிடப்பட்டது. அங்கிருந்து இடம்பெயர்ந்த அரிகொம்பன், தமிழ்நாட்டின் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. கம்பம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 1 வாரம் முகாமிட்டிருந்தது அரிகொம்பன் யானை. இதனால் கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
பின்னர் மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானை, களக்காடு அகத்தியர் மலை யானைகள் வனப்பகுதியில் கொண்டு போய்விடப்பட்டது. இந்த யானையின் நடமாட்டம் குறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு ஐஏஎஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பகிரப்பட்டது.

இந்நிலையில் நேற்று அரிகொம்பன் உறங்கும் வீடியோ என தலைப்பிட்டு சுப்ரியா சாகு ஒரு வீடியோ வெளியிட்டார். நாமும் இந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பழையது- அரிகொம்பன் யானை தொடர்பானது அல்ல என ஆதாரங்களுடன் நெட்டிசன்கள் வெளியிட்டனர். இதனால் அரிகொம்பன் உறங்குவதாக வெளியிட்ட ட்விட்டர் பதிவையே சுப்ரியா சாகு டெலிட் செய்துவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அரிகொம்பன் யானை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. அரிகொம்பன் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது எனில் பழைய வீடியோவை ஏன் வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு வெளியிட வேண்டும் என்பது நெட்டிசன்கள் கேள்வி. அப்படியானால் அரிகொம்பன் யானை, தமிழ்நாடு வனத்துறை கண்காணிப்பில் இல்லாமல் எங்கே போனது என்பது இன்னொரு கேள்வி என்கின்றனர் நெட்டிசன்கள். இதனால் அரிகொம்பன் தொடர்பான குழப்பம் நீடிக்கிறது. தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள்தான் அரிகொம்பன் குறித்த உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications