சுஜித்தை மீட்க ஏன் ராணுவம் அழைக்கப்படவில்லை?.. ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் அதிரடி பதிலடி!
குழந்தை சுஜித் மீட்பு பணியில் ஏன் ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: குழந்தை சுஜித் மீட்பு பணியில் ஏன் ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்ததும், அவரின் மரணமும் தமிழகத்தை நிலை குலைய வைத்துள்ளது. இன்னும் மக்கள் அந்த துக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடந்து, கடைசியில் தோல்வியில் முடிந்தது.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் சுஜித் மரணம் தொடர்பாகவும், அது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில், குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது. மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர்.

கோபம்
சுஜித் விஷயத்தில் நான் கோபம் அடைவதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார்.நான் கோபம் அடையவில்லை.ராணுவ வீரர்களை மீட்பு பணிக்கு அழைக்க வேண்டியது இல்லை. ஸ்டாலின் கோரிக்கையில் நியாயம் இல்லை.

என்ன பயிற்சி
பயிற்சி பெற்ற துணை ராணுவப்படை வீரர்கள் பேரிடர் மீட்பு படையில் இருக்கிறார்கள் .ராணுவத்திற்கு துப்பாக்கி வைத்து சுடத்தான் தெரியும், போர்வெல் பற்றி தெரியாது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரே துணை ராணுவப்படைதான்.

ராணுவம் இருந்தது
ஸ்டாலின் அரசியல் காழ்புணர்ச்சியோடு செயல்படுவது வருத்தமளிக்கிறது. திமுக ஆட்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை ஏன் மீட்கவில்லை?. அப்போது ஏன் நீங்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை

ஸ்டாலின்
சுர்ஜித் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்; தேவையற்ற குழப்பத்தை கிளப்ப வேண்டாம். அரசை குறை சொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார்.எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறுவது முறையல்ல, என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
NDA Meeting Trichy LIVE: மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு தாமதப்படுத்துகிறது - மோடி -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications