சென்னை டூ புனே.. ரயில் நிலையத்தில் ஐடி இன்ஜினியர் சுற்றிவளைப்பு.. லேப்டாப்பில் இருந்த அல்கொய்தா
சென்னை: ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு சென்றுள்ளார். அவரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஜூபைர் ஹங்கர்கேகர் புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட 'அல்கொய்தா' பயங்கரவாத அமைப்பின் ஆவணங்களை வைத்திருந்ததாக எழுந்த புகாரில் கைதாகி உள்ளார்.
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட 'அல்கொய்தா' பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பினர் ஆன்லைன் மூலம் மகாராஷ்டிராவில் செயல்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அம்மாநில மாநில பயங்கரவாத தடுப்பு படையினருக்கு சிலரை பற்றி ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் புனேயில் பல இடங்களில் கடந்த 9-ந்தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் புனே கோந்துவா பகுதியில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவர் வீட்டில் 19 லேப்-டாப்கள் மற்றும் 40 செல்போன்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஜூபைர் ஹங்கர்கேகர் அல்கொய்தா தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து இருந்ததும், அந்த அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இந்தநிலையில்: ஜூபைர் ஹங்கர்கேகர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ரெயில் மூலம் புனே செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவர் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் புனே சென்றுள்ளார். இந்நிலையில் புனே ரயில் நிலையத்தில் ஜூபைர் ஹங்கர் கேகரை அம்மாநில மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். உடன் வந்த அவரது நண்பரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
ஜூபைர் ஹங்கர்கேகர் ஒருமாத கண்காணிப்புக்கு பிறகே உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூபைர் ஹங்கர்கேகரின் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் ஆகும். அவர் புனேயில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி, கோந்துவா பகுதியில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்2019 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அல்-கொய்தா உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், புனேவில் உள்ள சில பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்களுடன் (குறிப்பாக அல்-ஷபாப் மற்றும் பிற குழுக்களுடன்) தொடர்பில் இருந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications