சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது ஏன்?

சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்டிரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Why was the construction of Thiagaraya Nagar Natesan Park metro station abandoned?

இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகளும் சென்னை நடக்கிறது. ரூ.63,246 கோடியில் நடைபெறுநும் இரண்ட்ம் கட்ட மெட்ரோ பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்காக, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் அமைக்கும் பணி சென்னை முழுவதும் தொடங்கி உள்ளது.

கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் திநகர் உள்பட முக்கியமான பல்வேறு ரயில் நிலையங்கள் வருகிறது. இந்நிலையில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் தியாகராயநகர் நடேசன் பூங்கா மெட்ரோரயில் நிலையம் அமைப்பது கைவிடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, நந்தனம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில்,நடேசன் பூங்காவில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, "நந்தனம் மெட்ரோ ரயில்வே ஸ்டேசனில் இருந்து நடேசன் பூங்கா ரயில் நிலையம் 625 மீ.தொலைவில் அமைகிறது. மறுபுறம், நடேசன் பூங்கா, பனகல் பார்க் ரயில்நிலையம் 623 மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே 700 மீட்டர் தொலைவுக்கும் குறைவான தூரமாக இருப்பதால் நடேசன் பூங்கா ரயில்நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது" என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+