அடிவயிறு கலங்குது.. ஓபிஎஸ்ஸே தேவலாம் போலயே.. "வெல்லத்தை" காணோமாம்.. மாஜி பேச்சால் வாயடைத்துபோன மதுரை
மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் பிரச்சாரம் செய்தார்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் தந்த வெல்லம் உருகி கரைந்து போய்விட்டதாம்.. அதை காணோம் என்று போலீசில் மக்கள் புகார் தந்து கொண்டிருப்பதாக ஆர்பி உதயகுமார் பேசிய பேச்சை கேட்டு மதுரை மக்கள் மிரண்டு போயுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.. எந்த முறையும் இல்லாமல் அதிமுக இந்தமுறை தனித்து போட்டியிடுகிறது..!
முழுக்க முழுக்க திமுக அரசை டார்கெட் செய்து களமிறங்கி உள்ளது.. குறிப்பாக 2 விஷயங்களை பிரச்சாரங்களில் கையில் எடுத்துள்ளது...

ஸ்டாலின் அறிவிப்பு
ஒன்று, பெண்களுக்கு 1000 ரூபாய், மற்றொன்று பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் விவகாரம்.. இந்த ஊழல் விவகார குற்றச்சாட்டை முதன்முதலில் ஆரம்பித்து வைத்ததே எடப்பாடி பழனிசாமிதான்.. ஒரு மாத காலமாகவே இந்த ஊழல் புகார் குறித்து எங்கு போனாலும் அதிமுக தலைவர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.. இந்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறி, சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டுக்கே போய்விட்டனர்.

ஆர் உதயகுமார்
இப்போது பிரச்சாரங்களிலும் இதே ஊழல் புகார் எதிரொலிக்கிறது.. ஓபிஎஸ் முதல் செல்லூரி ராஜு வரை ஊழல் புகாரை தெரிவித்து வரும் நிலையில், இப்போது மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் அதையே தெரிவித்துள்ளார்.. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 27 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.

முறைகேடு
அப்போது அவர் பேசியபோது, "பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு செய்து 65% கொள்ளையடித்தது தான் திமுக அரசு.. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் இன்னும் 3 ஆண்டுகளில் வருவதாக ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது... அதனால் எதைஎதையோ உளறி வருகிறார். ஸ்டாலின் இந்த மதுரையின் வளர்ச்சிக்காக எந்த திட்டமும் செய்யவில்லை. ஒரே ஒரு இடம்தான் செய்திருக்கிறார்... அதுவும் அவருடைய அப்பா பெயரில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்..

அதிமுக அரசு
கடந்த காலங்களில் பொங்கல் பரிசாக அதிமுக அரசு 1000 ரூபாய் மற்றும் 2,500 ரூபாயும் தரமான பொங்கல் பரிசும் வழங்கியது. ஆனால், இப்போதைய ஆட்சியில் உள்ள திமுக பொங்கல் பரிசு கொடுத்தது.. அதில் வழங்கப்பட்ட மண்டை வெல்லம் வீடு சென்று சேர்வதற்குள் வடிந்து கீழே விழுந்துவிட்டது. அதனைக் காணோம் என மக்கள் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளித்துள்ளனர்.

முறைச்சு பார்க்குது
ஏற்கனவே பொங்கலுக்கு வழங்கிய அரிசியை பற்றி ஓபிஎஸ் குறை சொல்லி வருகிறார்.. அந்த அரிசியை மாட்டுக்கு கொடுத்தால் அது முறைச்சு முறைச்சு பார்க்குது என்றார்.. இப்போது, ரேஷனில் தந்த வெல்லம் உருகி விடவும் அதை காணோம் என்று மக்கள் ஸ்டேஷனில் புகார் தந்து கொண்டிருக்கிறார்கள் என்று உதயகுமார் பேசியுள்ளதை கேட்டு மதுரையே வாயடைத்து போய்விட்டது.. இதுக்கு ஓபிஎஸ் பேசியதே பரவாயில்லை போலயிருக்கே என்று முணுமுணுத்து வருகின்றனர்!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications