சிஎஸ்கே வீரருக்கு செம லக்.. இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் பெரிய மாற்றம்.. ஆல் ரவுண்டருக்கு செக்
சென்னை: 2021 டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முக்கியமான ஸ்பின் பவுலர் நீக்கப்பட்டு, ஆல் ரவுண்டர் சிஎஸ்கே வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
2021 டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஐபிஎல் இரண்டாம் பாதி ஆட்டத்திற்கு முன்பே தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதன்பின் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்தில்தான் வீரர்களின் பார்ம் குறித்த கவலை ஏற்பட தொடங்கியது.
இந்திய அணியில் தேர்வான பல முக்கியமான வீரர்கள் பார்மை இழந்தனர். முக்கியமாக சூர்யா குமார், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் மோசமாக பார்மை இழந்து தவித்தனர்.

பார்ம்
ஆனால் தொடர் முடியும் நேரத்தில் மிக சரியாக இருவருமே பார்மிற்கு வந்தனர். ஆனால் இன்னும் பவுலிங் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பார்மிற்கு திரும்பவில்லை. அவர் இன்னும் பவுலிங் செய்ய தொடங்கவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் அஸ்வின் போன்ற ஸ்பின் பவுலர்களும் சரியாக ஆடவில்லை.

ராகுல் சாகர்
அஸ்வின், ராகுல் சாகர் இரண்டு பேருமே இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இரண்டு பேருமே சரியாக ஆடவில்லை. முக்கியமாக ராகுல் சாகர் மும்பையின் கடைசி சில போட்டிகளில் சரியாக ஆடாத காரணத்தால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ராகுல் சாகருக்கு பதிலாக சாஹலை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

ஹர்திக் பாண்டியா
அதேபோல் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏற்கனவே வெங்கடேஷ் ஐயர் நெட் பவுலராக இந்திய அணிக்குள் வந்துவிட்டார். இந்த நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய பட்டியல் 15ம் தேதிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சாஹல்
புதிய சில வீரர்கள் அணிக்குள் சேர்க்கப்பட்டு 15ம் தேதிக்குள் புதிய பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக இன்று இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் இருந்து அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் அணிக்குள் வந்துள்ளார்.

ஷரத்துல்
ஏற்கனவே அணியில் மாற்றம் வரப்போகிறதா என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில்தான் அக்சர் நீக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா பவுலிங் சரியாக செய்யாத நிலையில் ஷரத்துல் தாக்கூரை பாதுகாப்பிற்காக எடுத்துள்ளனர். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு இது சிக்கலாகி உள்ளது. முன்பு ஸ்டான்ட் பை வீரராக இருந்த ஷரத்துல் தற்போது அணிக்குள் வந்துள்ளார்.

மாற்றம்
2021 டி 20 உலகக் கோப்பை தொடரும் இங்குதான் நடக்கிறது. தன்னை எடுக்காத பிசிசிஐ தேர்வாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் சாஹல் ஆட்டம் அமைந்து இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது இந்திய அணியின் ஹோட்டலுக்குள் அவரும் சென்று இருப்பது பல கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications