மத்திய அமைச்சரவையில் தேமுதிகவிற்கு இடம் கிடைக்குமா.? முதல்ல ரிசல்ட் வரட்டும்.. சுதீஷ் பதில்
சென்னை: பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை தக்க வைத்தால், மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் துணைச் செயலாலர் எல்கே சுதீஷ் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, பிரபல முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளால் அரசியல் களம் பரபரத்து காணப்படுகிறது. கூட்டணி கணக்குகளும் தேசியளவில் மாறும் சூழல் உருவாகியுள்ளது.

கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா தான் ஆட்சியை தக்க வைக்கும் என முடிவுகள் சொல்லப்பட்டாலும், நாளை பிற்பகலுக்கு மேல் உண்மை நிலவரம் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்து விடும்.
இந்த சூழலில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் தனது கூட்டணி கட்சியினருக்கு இரவு விருந்து அளித்தார். இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், அன்புமணி ராமதாஸ், எல்கே சுதீஷ் மற்றும் பிரேமலதா உள்ளிட்ட தமிழகத்தை கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
தமிழகத்தை பொறுத்த வரை பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணியில் பாமக 7 தொகுதிகளும், பாஜக 5 தொகுதிகளும், தேமுதிக 4 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டது
எக்ஸிட் போல் முடிவுகளின்படி தேமுதிக ஒரு தொகுதியில் ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அது சுதீஷ் போட்டியிட்ட கள்ளக்குறிச்சியாக இருக்கவே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி விருந்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய சுதீஷிடம் செய்தியாளர்கள், ஒருவேளை பாஜ ஆட்சியை தக்கவைத்தால் மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம் பெறுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய சுதீஷ் இது குறித்து தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின் தான் தீர்மானிக்க முடியும் என்றார். மேலும் மத்திய அமைச்சரவையில் தங்கள் கட்சி இடம் பெறுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து தான் முடிவு செய்வர் என எல்.கே.சுதீஷ் கூறினார்
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications