2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? பொலிவியா பழங்குடிகள் நிலம் அபகரிப்பா? நித்தியானந்தா சொன்ன பதில்!
சென்னை: கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ள சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தாம் நலமுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் லைவ்வாக, பக்தர்களின் பல கேள்விகளுக்கு சுவராசிய பதில்களை தந்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சாமியார் நித்தியானந்தா தந்த பதில்கள்

2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருமா?
கைலாசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுமா என்று மட்டும் கேளுங்கள்.. கைலாசா பற்றி மட்டுமே தயவு செய்து கேள்வி கேளுங்கள்.. வேறு எந்த விவகாரங்களையும் பற்றி கேட்க வேண்டாம்.. கைலாசத்தில் ஆட்சி மாற்றம் இருக்காது என்பது மட்டும் எனக்கு தெரியும்.. கைலாசம், இந்து மதம் சார்ந்து மட்டும் பதில் சொல்வேன்.
2026 ல் ஆட்சி மாற்றம் நடைபெறுமா?
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 5, 2025
இந்து விரோத ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு, பகவான் நேரலையில் பதிலளித்தார் மற்றும் பொது மக்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து அருளாசி வழங்கினார்கள்.
03 ஏப்ரல் 2025, மஹாகைலாஸா.
மேலும் விபரங்கள் அறிய தொடர்புக்கு [email protected] pic.twitter.com/v5TKrngxhf
பொலிவியாவில் அமேசான் காடுகள் நில அபகரிப்பா?
அமேசான் காடுகளில் வாழும் மக்களுக்கு யோகா வகுப்புகள் கற்றுக் கொடுக்க 3 பேர் மட்டும் சென்றனர். சுமார் 1 லட்சம் பேர் வசிக்கும் இடத்தில் 3 பேர் போய், நில அபகரிப்பு செய்ததாக சொல்வது என்பது நான் இறந்துவிட்டதாக எப்படி வதந்தி பரப்பிவிடப்பட்டதோ அதேபோல சுத்த பொய். (பொலிவியாவில் 1,000 ஆண்டுகள் குத்தகைக்கு 11 லட்சம் ஏக்கர் நிலத்தை பழங்குடிகளிடம் ஏமாற்றி பறித்துக் கொண்டதாக நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன)
பொலிவியாவில் தாக்குதல் நடந்தது ஏன்?
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 5, 2025
இந்து விரோத ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு, பகவான் நேரலையில் பதிலளித்தார் மற்றும் பொது மக்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து அருளாசி வழங்கினார்கள்.
03 ஏப்ரல் 2025, மஹாகைலாஸா.
மேலும் விபரங்கள் அறிய தொடர்புக்கு [email protected] pic.twitter.com/hHCPBW50ze
ரிவெர்ஸ் ஏஜிங்- இளமையாக வைத்து கொள்வது எப்படி?
ஒரு வேளை உணவு, இரு வேளை வயிற்றை சுத்தம் செய்தல், 3 வேளை தியானம் செய்தால் இளமையாக இருக்க முடியும். இவ்வாறு பல கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா பதிலளித்துள்ளார்.
இளமையாய் வைத்துக்கொள்வது எப்படி?
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 5, 2025
இந்து விரோத ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு, பகவான் நேரலையில் பதிலளித்தார் மற்றும் பொது மக்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து அருளாசி வழங்கினார்கள்.
03 ஏப்ரல் 2025, மஹாகைலாஸா.
மேலும் விபரங்கள் அறிய தொடர்புக்கு [email protected] pic.twitter.com/CStHZziiVO












Click it and Unblock the Notifications