பழவேற்காட்டில் 2 படகுகள் மோதி கவிழ்ந்ததில் பெண் பலி.. தடையை மீறி சவாரி செய்ததால் விபரீதம்!
சென்னை: பழவேற்காட்டில் இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்யப்பட்டு வந்தது. படகு சவாரி அப்பகுதி மீனவர்களுக்கு வருமானத்துக்கு வழிவகுக்கும் பெரும் தொழிலாக இருந்தது.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு படகு சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலியாயினர். இதையடுத்து அங்கு படகு சவாரிக்கு மாவட்ட அரசு தடை விதித்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு சில காலம் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் தடையை மீறி படகு சவாரி தொடங்கியது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பழவேற்காட்டு ஏரியில் படகு சவாரி செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஒரு படகில் பயணம் செய்த 16 பேரும் நீரில் மூழ்கினர். ஆனால் அவர்களை அப்பகுதி மீனவர்கள் உடனடியாக ஏரியில் குதித்து மீட்டனர்.
ஆனால் இந்த விபத்தில் மேரி ஜான் என்ற பெண் மட்டும் பலியாகிவிட்டார். இந்நிலையில் தடையை மீறி படகு சவாரி மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications