திண்டுக்கல்லில் விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள்.. போலீஸ் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2 பெண் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, திண்டுக்கல்லில் இரண்டு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ள நிலையில், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Women in Dindigul Observe Hunger Strike Until Death for Vijay

தமிழகத்தில் நிலவும் அரசியல் நகர்வுகளுக்கு இடையே, திண்டுக்கல்லைச் சேர்ந்த சரண்யா மற்றும் வளர்மதி ஆகிய இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இதில், ​ஜனநாயக முறைப்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும். ​சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ​அரசியல் அமைப்புச் சட்டம் 19(1)(a) மற்றும் 19(1)(b)-ன் படி, அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமைதியாக காரியம் சாதிக்கும் விஜய்.. திமுக, அதிமுக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவெகவிற்கு சாதகமாகிறதா?

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி அறவழியில் இந்தப் போராட்டம் நடைபெற்ற போதிலும், பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பெண் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், உடன்பாடு எட்டப்படாததால் இருவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 107 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், ஆளுநர் மாளிகையின் முடிவை நோக்கி ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.


என்ன நடக்கிறது

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 108 இடங்களை வென்றதால் தனிப்பெரும் கட்சியாக நிற்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவை வழங்கி உள்ளது. இன்னும் 5 முதல் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவை அவர் அதிமுக கூட்டணியில் இருந்து பெற முயற்சி செய்யவில்லை,, உதாரணமாக பாமகவிற்கு 4 இடங்கள் உள்ளன. அமமுகவிற்கு ஒரு இடம் உள்ளது. இவற்றை கேட்டு பெற விஜய் விரும்பவில்லை.. அதேநேரம் அதிமுகவிடமும், பாஜகவிடமும் விஜய் ஆதரவு கேட்கவில்லை.. அவர் முழுக்க முழுக்க திமுக கூட்டணியை தான் குறிவைத்து செயல்படுகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸை தன் பக்கம் விஜய் கொண்டுவந்துவிட்டார். ஆனால் திருமாவளவனின் விசிக இரண்டு இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும் வைத்துள்ளது. இவை திமுக கூட்டணியில் வென்ற இடங்கள். இவர்களிடம் தான் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இவர்களிடம் ஆறு இடங்கள் உள்ளன. எனவே இந்த சூழலில் 6 இடங்களை சேர்த்தால் 119 வந்துவிடும். எனவே ஆளுநர் எந்த பிரச்சனையும் செய்யாமல் விஜய் பதவியேற்க ஒப்புக்கொள்வார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெல்வார். ஆனால் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்களா என்பதே இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+