அவங்க அனுமதி இல்லாம உங்களால ஏதாவது செய்ய முடியுமா? “நல்ல காமெடி”.. அண்ணாமலை மீது காயத்ரி அட்டாக்!
தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை ஒரு காமெடி என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
சென்னை : "டெல்லியை பார்த்து பயப்படவில்லை என தமிழில் பேசுவது போல், ஆங்கிலத்திலோ இந்தியிலோ தேசிய செய்தி சேனல்களில் அதே விஷயத்தைப் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?" என மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அண்மையில் அக்கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வரும் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நான் தலைவன், என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன் எனச் சீறியிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
டெல்லி மற்றும் ஆர்எஸ்எஸ் அனுமதி இல்லாமல் கட்சியில் யாரையும் நியமிக்க முடியாது, டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேச முடியாது என்பதை அண்ணாமலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு தாவும் பாஜகவினர்
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜக ஐடி விங் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன், சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி விங் நிர்வாகிகள் என பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவினர் அதிமுகவில் இணைந்தது பற்றி காட்டமாகப் பேசிய அண்ணாமலை, "பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும்" எனத் தெரிவித்தார்.

நான் தலைவன்
மேலும், நான் தமிழ்நாட்டில் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதைச் செய்வேன். கருணாநிதி, ஜெயலலிதா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது" எனத் தெரிவித்தார். இதனை அண்மையில் அண்ணாமலையை குற்றம்சாட்டி பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

ஜால்ரா அடிக்க
காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணாமலை நீங்கள் யாரையும் மேனேஜராகவோ அல்லது தலைவராகவோ ஆக்கத் தேவையில்லை. அனைவரும் சுயமாக உருவாக்கப்பட்டவர்கள். உங்களுக்கு ஜால்ரா அடிக்க யாரையேனும் தலைவராக உருவாக்க தேவை இல்லை. முதலில் சென்று பூத் வேலை, களப்பணி செய்து தமிழ்நாட்டின் அடிமட்டத்தை அடையுங்கள். டெல்லி அனுமதியோ ஆர்எஸ்எஸ் அனுமதியோ இல்லாமல் உங்களால் கட்சியில் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது. டெல்லி ஆதரவு இல்லாமல் கூட்டணி பேசக்கூட முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். டெல்லி உங்களைப் பார்த்து பயப்படுவது போல் நீங்கள் பேசுவது, தமிழ் செய்தி சேனல்களில் நீங்கள் டெல்லியை பார்த்து பயப்படவில்லை என தமிழில் பேசுவது போல், ஆங்கிலத்திலோ இந்தியிலோ தேசிய செய்தி சேனல்களில் அதே விஷயத்தைப் பேசுவதற்கு தைரியம் இருக்கிறதா?

சேறு
மேலும் 20-30 வருடங்களாக கட்சியில் பணியாற்றியவர்களை சேறு என்று கருத்து சொல்வது முட்டாள்தனமான விஷயம். மோடி, அமித்ஷா மற்றும் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறார்கள். அவர்களை ஒரு சேறு என்று அழைக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மற்றும் பாஜக கட்சிக்கும் நீங்கள் ஒரு பெரிய நகைச்சுவை." என விமர்சித்துள்ளார். செந்தாமரை மீது ஒட்டிய சேறு என பாஜகவினர், சிடிஆர் நிர்மல் குமார் விலகலை விமர்சித்த நிலையில் இவ்வாறு விமர்சித்துள்ளார் காயத்ரி.

சவாலுக்கு ரெடியா
மேலும் மற்றொரு பதிவில் காயத்ரி ரகுராம், "அண்ணாமலை ஊழல் செய்யாதவராக இருந்தால், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து அவர் தனது சொந்த டிரஸ்ட்டில் செய்யப்பட்ட டெபாசிட்கள், பரிவர்த்தனைகளை வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு காட்டுவாரா? வாட்ச் பில் உடன்.. அவர் இந்த சவாலுக்கு ஒப்புக்கொள்கிறாரா? ஊழல், கமிஷன், வசூல் என்பது இங்கு பெரும் கேள்வியாகி வருகிறது.

யூடியூப் சேனல்களுக்கு பணம்
மாநிலத் தலைவரான பிறகு அண்ணாமலை மூலம் எத்தனை யூடியூப் சேனல்களுக்கு நிதியளிக்கப்படுகின்றன? எத்தனை ஊடகங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது? மாநிலத் தலைவரான பிறகு சமீப காலத்தில் எத்தனை நிறுவனங்களில் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டுள்ளன? அவரது வருமானம் என்ன? ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 4 ஆடுகளை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு பேருக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? என்பதே இன்றைய மக்களின் கேள்வி." எனக் கூறியுள்ளார்.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications