நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? ரஜினிகாந்த் காட்டமான அறிக்கை.. முழு விவரம்
Recommended Video
சென்னை: மற்றவர்களைப்போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தில், எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரஜினிகாந்த் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சில ரசிகர்களே இந்த குற்றச்சாட்டையும் முன் வைத்தனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டார். அதில், ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். அப்படி இல்லாமல், மற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி கேள்வி எழுப்பியுள்ளார்.
[மக்கள் மன்றத்தை வைத்து அரசியலில் சாதிக்க முடியாது.. ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை]
ரஜினிகாந்த் கூறியுள்ளதை அறிக்கையில் நீங்களே பாருங்கள்: