10% இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசன திருத்தம் செய்தது மோசடியானது- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
கொச்சி: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டது மோசடியானது என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

மத்திய பாஜக அரசின் இந்த 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. திமுக,விசிக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்குகளை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே கேரளா மாநிலம் கொச்சியில் கருத்தரங்கு ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி சந்துரு, இந்த 10% இடஒதுக்கீட்டை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக நீதிபதி சந்துரு பேசுகையில், முற்படுத்தப்பட்ட அல்லது பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் ஏழைகளாக இருப்போருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் செய்திருப்பது மோசடியானது.
10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு தடையாக இருக்கக் கூடியது. இதை ஏற்கவோ, ஆதரிக்கவோ முடியாது. நமது நாட்டில் 2,000 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது முற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவும் இல்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு எனில் ஏன் ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இதில் அடங்கவில்லை? நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. இவ்வாறு நீதிபதி சந்துரு கூறினார்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications