10% இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசன திருத்தம் செய்தது மோசடியானது- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
கொச்சி: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டது மோசடியானது என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

மத்திய பாஜக அரசின் இந்த 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. திமுக,விசிக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்குகளை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே கேரளா மாநிலம் கொச்சியில் கருத்தரங்கு ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி சந்துரு, இந்த 10% இடஒதுக்கீட்டை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக நீதிபதி சந்துரு பேசுகையில், முற்படுத்தப்பட்ட அல்லது பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் ஏழைகளாக இருப்போருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் செய்திருப்பது மோசடியானது.
10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு தடையாக இருக்கக் கூடியது. இதை ஏற்கவோ, ஆதரிக்கவோ முடியாது. நமது நாட்டில் 2,000 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது முற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவும் இல்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு எனில் ஏன் ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இதில் அடங்கவில்லை? நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. இவ்வாறு நீதிபதி சந்துரு கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications