"வெறியன்".. பாட்டியை கொன்று விட்டு.. சடலத்துடன் "உறவு".. 25 வயது மூர்க்கன்.. ஷாக்கில் கோவை!
71 வயது பாட்டியை கொன்று பலாத்காரம் செய்த இளைஞர் கைதானார்
கோவை: இறந்த நிலையில் கிடந்த பாட்டியை, இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி... இவர்தான் அந்த பாட்டி.. 71 வயதாகிறது.. மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
கோவை கணுவாய் போலீசாருக்கு விஷயம் தெரிந்து விரைந்து வந்தனர்.. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதோன், அந்த பாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது

பாட்டி
பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது.. இறுதியில், புதுக்கோட்டை மாவட்டம் சேவகம்பட்டி பகுதியை சேர்ந்த, வினோத் என்பவர்தான் பாட்டியை கொலை செய்தார் என்பது தெரியவந்தது.. வினோத்துக்கு கருப்பையா என்று இன்னொரு பெயர் உள்ளது.. 25 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி.

வறுமை
இதையடுத்து, வினோத்தை தேடிப்பிடித்து கைது செய்தனர்.. வினோத் பன்னிமடை பகுதியில் வசித்து வருகிறாராம்.. அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மனைவி, மகளுடன் தங்கியிருந்துள்ளார்.. ஆனால், தற்போது வேலை எதுவும் இல்லாததால், போதிய வருமானமும் இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்துள்ளார். அப்போதுதான், தனியாக வசித்து வந்த பாட்டியின் வீட்டில் திருட முடிவு செய்துள்ளார்.

செல்போன்
அதன்படி, கடந்த ஏப்ரல் 17 ம்தேதி இரவு, பாட்டி வீட்டிற்குள் சென்று அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, 10 கிராம் மதிப்பிலான கம்மல், மூக்குத்தி, வளையல் போன்றவகைளை திருடி சென்றுள்ளார்.. பாட்டியின் செல்போனையும் எடுத்து வைத்து கொண்டார்..

சடலம்
அங்கிருந்து கிளம்பி போகும்போது, இறந்த நிலையில் கிடந்த பாட்டியை சடலம் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இவை அனைத்தையும் வினோத் போலீசாரிடம் வாக்குமூலமாகவே தந்துள்ளார். இப்போதுவினோத் மீது கொலை, திருட்டு, பாலியல் பலாத்காரம் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.

ஜெயில்
பாட்டிக்கு, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்... ஆனால், அவர்கள் எல்லாருக்குமே கல்யாணமாகி வேறு வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.. அதனால் பாட்டி மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்... இதைதான், காமுகன் சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.. ஆரம்பத்தில் நகைக்காகவே இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்பட்டது. பிறகுதான், போஸ்ட் மார்ட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்களை கிடைத்துள்ளது. இதைவைத்தே கிடுக்கப்பிடி விசாரணையும் நடந்துள்ளது. இப்போது வினோத் ஜெயிலில் இருக்கிறார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications