வால்பாறை அருகே சோகம்.. சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுவன் பரிதாப பலி!
கோயம்புத்தூர்: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சிறுத்தை தாக்கி கொன்றிருக்கிறது.
வால்பாறை பகுதியில் உள்ள வேவர்லி எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இன்று இரவு ஒரு தொழிலாளியின் 8 வயது மகன் நூருல் இஸ்லாம் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கியுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு இருக்கின்றனர். இதனால் மிரண்ட சிறுத்தை சிறுவனை தூக்கிக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கிறது. உடனடியாக மக்கள் போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். மறுபுறம் சிறுவனை தேடி அலைந்திருக்கின்றனர். சிறுவன் கடுமையான காயங்களுடன் புதர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறான்.
உடனடியாக அவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
வால்பாறை பகுதியில் மனிதர்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே இதேபோன்று வடமாநில தொழிலாளர் ஒருவரின் குழந்தையை சிறுத்தை தாக்கி கொன்றிருக்கிறது. எனவே இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிறுத்தைகளின் உணவு லிஸ்ட்டில் மனிதர்கள் கிடையாது. ஆனால் காயமடைந்த, வயதான வேட்டையாட முடியாத சிறுத்தைகள் எளிதான டார்கெட்டை குறி வைக்கும். அப்போதுதான் அது மனிதர்களைs தாக்குகின்றன. ஒருமுறை மனிதர்களை தாக்கி ருசி கண்டுவிட்டால், மீண்டும் மீண்டும் அது மனிதர்களை தாக்குகின்றன. எனவே அது ஆட்கொல்லி சிறுத்தையாக மாறுகின்றன. அதற்கு முன்னர் அதை பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications