பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் நடத்தவே கூடாது! சட்டம் வரணும்! கொதித்த நடிகர் ரஞ்சித்
கோவை: சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும் என நடிகர் ரஞ்சித் விமர்சித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலில் நல்லதொரு மாற்றம் வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தை விவரித்துள்ளார்.
கோவை பெரியக் கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் "கவுண்டம்பாளையம்" திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் ரஞ்சித் பேசுகையில் கவுண்டம்பாளையம் திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது. நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் நடிக்கும் இந்த படத்தை நானே இயக்குகிறேன்.
கோவையை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பணக்கார பிள்ளைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நாடகக் காதல்தான் படத்தின் கதை கரு. இன்றைய காலகட்டத்தில் வரதட்சிணை கொடுமை, கொலை, தற்கொலை உள்ளிட்டவை நடக்கின்றன.
சுயமரியாதை திருமணம் என கூறி எவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கோபம் வரும். சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களது குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு மற்றவர்களுக்கு செய்யச் சொன்னால் செய்யமாட்டார்கள்.
பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது. அப்படிச் சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து திருமணம் நடத்தி வைப்பதற்கு பதில் அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே. அரசியல் கட்சி தொடங்கவும், வேறு ஒரு கட்சியில் சேரவும் எனக்கு திட்டமில்லை.
கள்ளச்சாராயம் விற்பவர்கள் சட்டசபையில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா, நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியலில் மாற்றம் வர வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு உதவுகிறார்களே, இது ஏன்? எல்லாம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டுதான்.
சாலைகளில் திரும்பும் இடமெல்லாம் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்லோ பாய்சன். இதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. கள்ளச் சாராயத்தை இவர்களால் ஒழிக்க முடியாது.
எனவே, நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என ஆசை எனக்கும் உள்ளது. விவசாயிகள் தற்கொலைக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. கள்ளுக்கடையை திறக்க வேண்டும். அதில் வருமானம் இல்லாததால் இவர்கள் விரும்புவதில்லை. மதுவை வைத்துத் தான் வளர்ச்சி. தமிழ்நாடு, மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சியடைந்து வருகிறது. பிளாஸ்டிக்கையே ஒழிக்க முடியவில்லை. இவர்கள் எப்படி மதுவை ஒழிப்பார்கள் என ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications