"ச"ன்னா சனாகான்.. "த"ன்னா தமன்னா.. அதுதானே சனாதனம்னு உதயநிதி சொல்வாரு.. நடிகை விந்தியா தாக்கு
கோவை: சனாதனம் என்றால் என்ன தெரியுமா என கேட்டு அமைச்சர் உதயநிதியை நடிகை விந்தியா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதிமுக என்ற கட்சி தொடங்கி நேற்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இநத் நிலையில் 52 ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நடந்த விழாவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
எம்ஜிஆர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அது போல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக தொடக்க விழா நடந்தது. இதில் கோவையில் நடந்த விழாவில் நடிகையும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான விந்தியா கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் சனாதனம் குறித்து யாருதான் பேச ஆரம்பித்தார்கள் என கேட்டேன். அப்போதுதான் உதயநிதி பேசினார் என தெரியவந்தது. பத்திரிகையாளர்கள் உதயநிதியிடம் போய் சனாதனம் என்றால் என்ன என கேட்டால் சனான்னா சனாகான், த என்றால் தமன்னா என்பார். அவருக்கு அவ்வளவுதான் தெரியும்.
அவருக்கும் சனாதனத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவருக்கு அர்த்தமே தெரியாது. நீங்கள் யாரு அதிமுககிட்ட வந்து சமூகநீதி குறித்தும் சனாதனம் குறித்தும் பேசுவது? ஸ்டாலினுக்கும் சனாதனம் என்றால் என்னவென தெரியாது. ஸ்டாலின் கிட்ட போய் யாரோ, உதயநிதிக்கும் சனாதனம் விவகாரத்திற்கும் பிரச்சினையாகிவிட்டது என சொல்லியிருக்கிறார்கள்.
உடனே அவர் நடிகர் சந்தானத்திற்கு போன் போட்டு உங்களுக்கும் உதயநிதிக்கும் என்னப்பா பிரச்சினைனு கேட்குறாரு. அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். அடுத்த திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளது. அதாவது ஒன்றிணைவோம் வா என்கிறார்கள், ரூ 1000 மட்டும் ஒரு கோடி பேருக்கு மட்டும்தான் தருவார்களாம். ஆனால் உறுப்பினர் அட்டையை வாங்க இவர்களுக்கு 15 கோடி பேர் தேவையாம்.
அரசுக்கு வரும் ஒவ்வொரு ரூபாயையும் மக்களுக்காகவே கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்தான் தலைவன். ஸ்டாலினிடம் போய் பத்திரிகையாளர்கள், நீட் எப்போது ஒழிப்பீர்கள், மின் கட்டணம் எப்போது குறையும் என கேட்டால் அவர் கையில் எடுக்கும் ஆயுதம்தான் சனாதனம், சமூக நீதி, இந்தி எதிர்ப்பு என்றார் விந்தியா. கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை போல் திமுக ஆட்சி நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications