சூலூர் மாரியம்மன் கோவில் திருவிழா..மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அசத்தலான ஒயிலாட்டம்!
கோயம்புத்தூர்: கோவை சூலூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
கோயில் திருவிழாக்களில் எப்போதும் ஒயிலாட்டத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. கோவை சுற்றுவட்டாரங்களில் கோவில் திருவிழாக்களில் ஒயிலாட்டம் அதிகம் இடம்பெறுவது வழக்கம்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாஜி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கோவில் திருவிழாக்களில் ஒயிலாட்டக் குழுவினருடன் நடனமாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் இத்தகைய விழாக்களில் அண்மைக்காலமாக எஸ்.பி.வேலுமணி, ஆறுக்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்காமல் இருந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் கணியூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அந்த கோவில் திருவிழாவில் கொங்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடனமாடப்பட்டது. ஒயிலாட்டம் நடன குழுவினருடன் இணைந்து எஸ்.பி. வேலுமணியும் ஒயிலாட்டம் நடமாடினார்.
இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications