கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொப்புள் கொடி கூட சரியா அறுக்கல.. பச்சிளம் குழந்தையை மண்ணில் வீசி சென்ற கொடூரம்

கோவை அருகே சாலையோரம் வீசிச் சென்ற பெண் குழந்தை மீட்கப்பட்டது.

Google Oneindia Tamil News

கோவை: தொப்புள் கொடி கூட சரியா அறுக்கல.. பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே சரவணா நகர் பகுதியில் கோவை திருப்பதி கோவில் உள்ளது. இன்று காலை இந்த கோயிலுக்குள் இருந்து குழந்தை ஒன்று அழும் சத்தத்தை சிவராமச்சந்திரன்-அமுல் என்ற தம்பதி கேட்டனர்.

Baby girl rescued near Coimbatore

இதனால் உடனடியாக கோயிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், பெண் குழந்தை ஒன்று மண்ணில் வீசப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் பிறந்திருந்ததால் குழந்தையின் உடலில் ரத்தம் தென்பட்டது.

இப்படியுமா இருப்பார்கள் பெண்கள்.. மாமியார்கள் குலத்துக்கே இவர்கள் மிகப் பெரிய அவமானம்.. ! இப்படியுமா இருப்பார்கள் பெண்கள்.. மாமியார்கள் குலத்துக்கே இவர்கள் மிகப் பெரிய அவமானம்.. !

தம்பதியினர் அந்த குழந்தையை தூக்கி சுத்தப்படுத்தி பால் புகட்டினார்கள். உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் முதலுதவிக்கு அனுமதித்தனர். அங்கு தொப்புள் கொடி சீராக அறுக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு குழந்தையை வீசிச் சென்றது யாராக இருக்கும் என்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி விசாரணையை ஆரம்பித்துளள்னர்.

English summary
Kovai Thudiyalur Police has rescued Born baby in this morning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X