என்னாது நான் தலைமறைவாகிவிட்டேனா.. சொந்த கிராமத்துலதாங்க இருக்கேன்- பார் நாகராஜ்
Recommended Video
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ வெளியானதை அடுத்து பார் நாகராஜ் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தான் சொந்த ஊரில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கடந்த 7ஆண்டுகளாக பெண்களை காதல் வலையில் விழ வைத்து கூட்டு பலாத்காரம் செய்து வந்தது. இந்த நிலையில் இதுபோல் காதல் வலையில் சிக்கி பலாத்காரம் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர் தைரியமாக புகார் அளித்தார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பாத விசிக.. தேர்தல் ஆணையத்தில் இன்று சின்னம் ஒதுக்கீடு
மாணவர்கள்
அந்த புகாரின் பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பலாத்காரம்
இந்த நிலையில் நேற்றைய தினம் பெண்களை பலாத்காரம் செய்வது தொடர்பான 4 வீடியோக்கள் வெளியானது. அதில் அதிமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட பார் நாகராஜ் ஒரு வீடியோவில் இருக்கிறார்.
ஜனநாயக மாணவர்
இதையடுத்து பார் நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மேலும் பார் நாகராஜை கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விசாரணை
இந்த நிலையில் விவகாரம் பெரிதாகவே, பார் நாகராஜ் நண்பர் வீட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் பார் நாகராஜ், கோவை ஆட்சியர் ராசாமணியை சந்தித்து தான் தலைமறைவாகவில்லை என மனு கொடுத்தார். மேலும் தனக்கும் பாலியல் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிறேன். எங்கும் தப்பி ஓடவில்லை என்றார்.