பெண்கள் கழிவறைக்குள்.. அத்துமீறிய பாஜக ஜோதி.. அலறிய பெண்.. அள்ளி சென்ற போலீஸ்.. கோவையில்!
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற, பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை வரதராஜபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஒப்பந்த பணியில் ஏராளமான ஆண் மற்றும் பெண் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் பெண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.
அத்துமீறினார்
அப்போது அந்த தொழிலாளியை பின்தொடர்ந்து கழிவறைக்குள் சென்றுள்ளார், ஜோதி என்ற ஆண். இவர் உக்கடம் பகுதியை சேர்ந்தவராம். அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பெண்கள் கழிப்பறை என தெரிந்தும், அத்துமீறி, ஜோதி அங்கு நுழைந்துள்ளார். அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்து பெண் துப்புரவு தொழிலாளியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
கூச்சல்
கழிவறை என்றும் பாராமல், அங்கு வைத்தே, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டு கத்தியுள்ளார். அலறல் சத்தம் அதிகரித்ததால், கோபமடைந்த ஜோதி பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பெண் காயமடைந்தார். அதற்குள் யாராவது வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், ஜோதி அங்கேயிருந்து தப்பியோடிவிட்டார்.
Recommended Video
போலீஸ்
இதனையடுத்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் துப்புரவு தொழிலாளி புகார் அளித்தார். ஜோதியின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம், கொலை முயற்சி, கொடும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, அதிரடியாக கைது செய்தனர் போலீசார்.
பிரமுகர்
கைது செய்யப்பட்ட ஜோதி, பாஜகவின் எஸ்சி-எஸ்டி பிரிவின் கோவை மாவட்ட தலைவராகவும், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும் இருக்கிறார். இந்த சம்பவம், கோவை பாஜகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.