ஆட்டோவில் வந்த 2 பெண்கள்.. விடிய விடிய நாசப்படுத்தினர்.. திருநாவுக்கரசு குறித்து திடுக் தகவல்கள்!
பண்ணை வீட்டு பகுதி மக்கள் திருநாவுக்கரசு பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டனர்
Recommended Video
கோவை: "ஆட்டோவில் வந்த 2 இளம்பெண்களை இரவு முழுவதும் மிரட்டி மிரட்டி நாசம் செய்தார்கள் திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும்.. ஊருக்கு போக கூட அவர்களிடம் காசு இல்லை' என்று சிபிஐ அதிகாரிகளிடம் திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை சொல்லி உள்ளனர்.
திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளில் சிபிஐ அதிகரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.
இது திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம்.

பண்ணை வீடு
நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம். இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இப்போது அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினார்கள்.

ஜன்னல்கள்
திருநாவுக்கரசு பண்ணை வீடு வித்தியாசமாக உள்ளதாம். வீட்டின் உள்ளே ஸ்பீக்கர் பெட்டிகள் சத்தம் வெளியே கேட்க முடியாத அளவுக்கு ஜன்னல்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கிறதாம். அந்த கண்ணாடியை கூட சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை வீடியோவும் எடுத்து கொண்டனர்.

பாட்டு சத்தம்
அப்போதுதான் பாலியல் விவகாரத்தில் வெளியான ஒரு பெண்ணின் வீடியோ திருநாவுக்கரசு வீட்டில் பதிவு செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். நடுராத்திரி திருநாவுக்கரசு நண்பர்களுடன் பைக்குகளில் பண்ணை வீட்டுக்கு வருவதையும், வீட்டில் பாட்டு சத்தம் கேட்பது குறித்தும் அங்கிருந்தோர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில் பல திடுக் தகவல்களை சொல்லி உள்ளனர்.

ஏடிஎம் கார்டுகள்
"கடந்த 2 வருஷத்துக்கு முன்பு அதிகாலை நேரத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு 2 இளம்பெண்கள் ஆட்டோவில் வந்தார்கள். திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் மிரட்டி மிரட்டி தங்களை அனுபவித்ததாகவும், தங்களிடமிருந்த பணம், ஏடிஎம் கார்டுகளை பறித்து கொண்டார்கள் என்றும் எங்களிடம் அழுதார்கள்.

200 ரூபாய்
சொந்த ஊருக்கு திரும்பி செல்லகூட தங்களிடம் பணம் இல்லை என்று அங்கிருந்தோரிடம் எங்களிடம் கண்ணீர்விட்டு சொல்லவும், அந்த பெண்களுக்கு தலா 200 ரூபாய் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தோம்" என்றனர். இதையடுத்து தொடர்ந்து திருநாவுக்கரசு சம்பந்தப்பட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்தும், விசாரித்தும் வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications