கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு..சூத்திரதாரி யார் உண்மை வெளிவருமா?
கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று கார் வெடித்த நிலையில் என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டை மேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. கார் வெடிப்பின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஐஏ விசாரணையின் முடிவில் கார் வெடிப்பிற்கான உண்மையான காரணம் என்ன? சதி வேலைக்கான சூத்திரதாரி யார் என்ற தகவல் வெளியே வரும். கோவை மாநகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications