கோவையில் ஒரே பகுதியில் அதிர்ச்சி அளிக்கும் கொரோனா தொற்று பரவல்.. கிருமி நாசினி தெளிப்பு!!
கோவை: தமிழகத்தில் கொரோன தொற்று எண்ணிக்கை சென்னையை அடுத்து மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூரில் இருக்கும் செல்வபுரத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 100ஐக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூரில் தொற்று இருக்கும் பகுதிகளில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 105பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செல்வபுரம், அசோக் நகர், கோவிந்தசாமி லே அவுட், ஆகிய பகுதிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
கோயம்புத்தூரில் குனியமுத்தூர், குறிச்சி, போத்தனூர் பகுதிகளில் கடந்த ஜூலை 4ஆம் தேதி ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் குனியமுத்தூரில் மட்டும் ஒரே குடும்பத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜவுளிக் கடை ஒன்றில் மகளின் திருமணத்திற்கு துணிகள் வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் மொத்தமாக 95 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 49 பரிசோதனை மையங்கள் அரசு சார்பிலும், 46 பரிசோதனை மையங்கள் தனியார் சார்பிலும் இயங்கி வருகின்றன. இதில் தனியார் ஆய்வகங்களில்தான் முறைகேடுகள் கொடிகட்டி பறப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த நான்கு பரிசோதனை மையங்கள் மூடப்பட்டன.
செல்வபுரத்தில் குடியிருந்து வரும் எம்.எல்.ஏ., அம்மன் கே அர்ஜூனாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னையில் மட்டும் இதுவரை 1,082பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மதுரையில் 69, திருவள்ளூரில் 100, செங்கல்பட்டில் 128, காஞ்சிபுரத்தில் 36, ராமநாதபுரத்தில் 21பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications