Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை வஉசி மைதானத்தில் வரப்போகும் மாற்றம்.. விளையாட்டு வீரர்களின் உச்சி குளிருது

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோவையில் சமீபத்தில்தான் செம்மொழி பூங்கா மற்றும் சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக பெரியார் நூலகம் உள்ளிட்ட சில திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் திட்டமும் காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் கைப்பந்து மற்றும் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கோவை வஉசி மைதானத்தில் அற்புதமான மாற்றத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. விமான நிலையம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

coimbatore-corporation-building-indoor-stadium-for-volleyball-in-voc-park

கோவை விளையாட்டு

விளையாட்டு துறையிலும் கோவை முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. தடகளம், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தேசியளவிலும், சர்வதேசளவிலும் தடம் பதித்து கொண்டிருக்கிறது. ஒண்டிப்புதூர் அருகே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். தற்போது அதற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும்விதமாக, ஆர்எஸ் புரம் பகுதியில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், ரூ.9 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்தார். அதே ஆர்எஸ்புரம் பகுதியில் செயற்கை புல்வெளி மைதானம் (டர்ஃப்) அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல கவுண்டம்பாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மைதானமும் கட்டப்பட்டு வருகிறது.

வஉசி மைதானத்தில் மாற்றம்

கோவை வஉசி மைதானத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் அதை பராமரித்து வருகிறது. அங்கு கால்பந்து மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கைப்பந்து, பேட்மின்டன், கபடி உள்ளிட்ட போட்டிகள் வெளிப்புற மைதானத்தில் நடந்து வருகிறது. அந்த நிலத்தையும் கோவை மாநகராட்சி நிர்வாகம் தான் பராமரித்து கொண்டிருக்கிறது.

மாறி வரும் பருவநிலை, சமதன்மையற்ற நிலப்பரப்பு ஆகியவற்றால் அங்கு விளையாடுவது பயிற்சி மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாட்டில் பலர் தடம் பதித்து வருகிறார்கள். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் அதிரடி மாற்றத்தில் இறங்கியுள்ளது.

உள்புற கைப்பந்து மைதானம்

வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள வெளிப்புற மைதானத்தை, உள்புற மைதானமாக மாற்றும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.1.95 கோடி மதிப்பில் உள்புற கைப்பந்து மைதானம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 2 கோர்ட்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. ரூ.75 லட்சம் மதிப்பில் மைதானம் மற்றும் ரூ.75 லட்சம் மதிப்பில் மேல்தளம், இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் பணிகளை நிறைவு செய்து மைதானத்தை திறக்க திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+