கோவையில் பரிதாபம்.. பக்கவாதத்தால் மனைவி மரணம்.. அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவர்!
கோவை: கோயம்புத்தூரில் மனைவி உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் கணவரும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. வயது 74. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சரோஜினி. வயது 72. இவர் கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சரோஜினி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை இவரது மகள் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், சரோஜினி நேற்று உயிரிழந்தார். இதையறிந்த கணவர் மணி துக்கம் தாங்காமல் அழுதுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணி, சரோஜினி தம்பதிகளின் உடல்கள் ஒரே நேரத்தில் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. வாழ்விலும் ஒன்றிணைந்து இருந்து, சாவிலும் இந்த தம்பதிகள் இணைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications