தலைக்கேறிய மதுபோதை.. பெட்ரோல் பங்க் ஊழியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் லாரியை திருப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மது, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக காவல் துறை சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுபோன்ற செயல்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் காளிமுத்து என்பவரை லாரி ஓட்டுநர்கள் இரும்பு ராடால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சரக்குகளை லாரி மூலமாக ஏற்றி வந்துள்ளனர். இந்த லாரியை ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஓட்டி வந்துள்ளனர். கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு லாரியை திருப்ப முயன்றுள்ளனர். அப்போது, விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரியை இயக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த பங்க் ஊழியர் காளிமுத்து ஓட்டுனரை எச்சரித்துள்ளார். இதனால், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பங்க் ஊழியர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், லாரி ஓட்டுநர்கள் இருவரும் அப்பகுதியில் இருந்து சென்றுள்ளனர். தொடர்ந்து, இரவு 12 மணியளவில் ஓட்டுநர்கள் இருவரும் பெட்ரோல் பங்கிற்கு திரும்பவந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் காளிமுத்துவை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில், காளிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
காளிமுத்துவை கொலை செய்துவிட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் லாரி ஓட்டுநர்கள் தலைமறைவாகி உள்ளனர். காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த ஓட்டுனர்களை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்வதற்காகச் சென்றபோது அவர்கள் இருவரும் தப்ப முயன்றுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது.
லாரியை திருப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications