உல்லாச வாழ்க்கை.. ஆடம்பர செலவு.. டீனேஜ் கொள்ளையர்களால் அதிர்ந்த கோவை
கோவை: ஊர் சுற்ற, ஆடம்பரச் செலவு என உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பைக் திருட்டு, நகைப் பறிப்பு, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு கோவை மாநகர போலீஸுக்கு போக்கு காட்டி வந்த கொள்ளையர்களை காவல் துறையினர் பிடித்துள்ளனர். போலீஸார் சுற்றி வளைத்தபோது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற அந்த நபர்கள் விபத்துக்குள்ளானதில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக திருட்டு வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு மற்றும் தங்க நகைகளை அணிந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. இதனால், பெண்கள் வெளியே செல்லவும், வாகனங்கள் வெளியே நிறுத்தவும் அச்சத்திற்குள்ளாகும் சூழல் ஏற்பட்டது.

தொடர் புகார்களின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணா சுந்தர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தனிப்படையினர் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இளைஞர்கள் சுற்றித் திரிந்ததும், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் குறித்த தடயங்களை திரட்டினர். பின்னர், தலைமறைவாக இருந்த அந்த இரண்டு இளைஞர்களையும் போலீஸார் பிடிக்க முயன்றபோது போலீஸாரின் பிடியில் இருந்து கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, போலீஸார் அவர்களைத் துரத்திய நிலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவரும் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில், இளைஞர்கள் இருவருக்கும் கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மாவு கட்டுப் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த இளைஞர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஷபீல் (19), ஷம்சீர் (18) என்ற இந்த இரு இளைஞர்களும் கோவையில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் இரண்டு இடங்களில் வாகனங்களை திருடியுள்ளது தெரியவந்தது.
மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும். அந்தப் பணத்தில் உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததும், ஆடம்பர செலவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சமூக வலைதள பக்கங்களை பார்த்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். திருடிய தங்க நகைகளை உருக்கி வைத்துக் கொண்டு, தேவைப்படும் சமயத்தில் அதனை விற்று பணத்தைப் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறரை பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்துள்ளனர்.
-
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications