Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஹலோ தம்பி போலீஸ் பேசுறோம்பா.. ஆபாச படம் பாக்குறீயாமே!” கோவையில் அத்துமீறிய மாணவர்கள்.. அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவையில் ஆபாச படம் பார்ப்பதாக கூறி மாணவர்களிடையே வசூல் வேட்டை நடத்திய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆபாச படம் பார்ப்பது தொடர்பான பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் இளைஞர்களிடையே எழுந்திருக்கிறது. எப்படி இருப்பினும் இந்த படங்களை பார்ப்பது கடுமையான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காவல்துறையும் இது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. மறுபுறம் ஆபாச படம் பார்ப்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்கிற போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பவர்களை குறி வைத்து காவல்துறையினரின் பெயரை பயன்படுத்த சிலர் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

College students arrested in Coimbatore for allegedly extorting money from fellow students for watching porno

அப்படி ஒரு சம்பவம்தான் கோவையில் நடந்திருக்கிறது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சபரி எனும் இளைஞர் பயின்று வருகிறார். இவருக்கு தொடக்கம் முதல் கல்வியில் அதிக ஆர்வம் இல்லை. எனவே மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். மற்ற சில இளைஞர்களும் சபரியுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றனர். இவர்கள் ஜாலியாக இருக்க பணம் தேவைப்பட்டிருந்திருக்கிறது. பெற்றோர்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.

எனவே இவர்கள் திட்டம் ஒன்றை போட்டியிருக்கிறார்கள். அதன்படி, 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் செல்போன் எண்களை சேகரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு போன் செய்து, "போலீஸ் பேசுறோம். நீ ஆபாச படம் பார்ப்பது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்திருக்கு. நடமாடும் நீதிமன்றம் மூலம் இது தொடர்பான விசாரணை வர இருக்கிறது" என்று மிரட்டியுள்ளனர். இப்படி மிரட்டும போது தவறாமல் வாக்கி டாக்கி சத்தத்தையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இது தொடக்கத்தில் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க குறிப்பிட்ட அளவு பணத்தை கேட்டிருக்கிறார்கள்.

இப்படியாக பல இளைஞர்களிடம் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களிடத்தில் சபரி குரூப் வேலையை காட்ட தொடங்கியிருக்கிறது. ஆனால் பல நாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்பதைபோல, சபரி குரூப் மீது சக இளைஞர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே அவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது சபரி குரூப் என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணையும் நடத்தியுள்ளனர். விசாரணையில், சபரி குழுவினர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேற்குறிப்பிட்டதை போல ஆபாச படம் பார்ப்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது? என்கிற புரிதல் இளைஞர்கள் மத்தியில் அதிகம் இருப்பதில்லை. சமீபத்தில் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று வந்திருந்தது. அதாவது, இளைஞர் ஒருவர் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இளைஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆபாச படத்தை பார்ப்பது குற்றமல்ல, பரப்புவதுதான் குற்றம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதேநேரம், ஆபாச படம் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல் குறித்தும் அவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அதிக அளவு அடிமையாகியுள்ளனர் என்று கூறியுள்ளனர். "ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் இந்த தலைமுறையினர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். பத்தில் ஒன்பது சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் என சொல்லக்கூடிய பதின்ம வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+