தந்தை பெரியாரை அவதூறாக பேசுவதா? ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தி.வி.க. மனு
Recommended Video
கோவை: தந்தை பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை போலீசாரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சென்னையில் துக்ளக் பொன்விழா ஆண்டு விழா கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில், ராமர்- சீதை படங்கள் ஆடையில்லாமல் எடுத்து வரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது என ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சு அவதூறானது; உண்மைக்கு எதிரானது என திராவிடர் இயக்கத்தினர் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒரு மனுவை அளித்தனர்.
அதில், துக்ளக் விழாவில் தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறாக பேசியுள்ளார். ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் தர்பார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications