Election Result: கோவையில் நாளை இந்த வழியா போயிடாதீங்க.. போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக நாளை கோவை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காந்திபுரத்திலிருந்து வடகோவை மேம்பாலம் அவிநாசிலிங்கம் கல்லூரி பாரதிபார்க் சாலை வழியாக ஜிசிடி சென்று லாலிரோடு வழியாக மருதமலை செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பொது மக்கள் வாகனங்களும் காந்திபுரம், வடகோவை மேம்பாலம், சிந்தாமணி சந்திப்பில் வலது புறம் திரும்பி கிழக்கு பெரியசாமி சாலை வழியாக தடாகம் ரோட்டை அடைந்து லாலி ரோடு ரவுண்டானா வழியாக மருதமலை செல்ல வேண்டும்,

கோவை போக்குவரத்து மாற்றம்
மருதமலை மற்றும் தொண்டாமுத்தூர் வடவள்ளி ஆகிய இடங்களில் இருந்து நகருக்குள் வரும் அரசு, தனியார் மற்றும் பொது மக்கள் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் லாலிரோடு ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி கௌலிபிரவுன் ரோடு மற்றும் டி.பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
காந்திபார்க், முத்தண்ணன்குளம், பூசாரிபளையம் ரோடு வழியாக தடாகம்ரோடு ஜிசிடி கோவில்மேடு டி.வி.எஸ். நகர், ஆணைகட்டி செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் டி.வி.சாமி ரோடு மேற்கு வழியாக சென்று மேட்டுப்பாளையம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். தடாகம் சாலை, இடையர்பாளையம், டி.வி.எஸ். நகர், கோவில்மேடு ஜி.சி.டி வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும், தடாகம் சாலை என்.எஸ்.ஆர் சாலை சந்திப்பில் (அவிலா கான்வெண்ட்) இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆர் ரோடு மற்றும் அழகேசன் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
தடாகம் சாலை
பூமார்க்கெட் புரூக்பில்ட் சிந்தாமணி, வடகோவையில் இருந்து தடாகம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், அவிநாசிலிங்கம் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதிபார்க் ரோடு, ராஜா அண்ணாமலை ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி அழசேகன் ரோடு மற்றும் என்.எஸ்.ஆர் ரோடு வழியாக தடாகம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
கோவை மாநகருக்குள் அனைத்து கனரக வாகனங்களும் 4.5.2026 (நாளை) காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை தடாகம் ரோடு, மேட்டுப்பாளைம் ரோடு, மருதமலை வடவள்ளி ஆகிய சாலைகளில் வருவதற்கு தடை செய்யப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாலி ரோடு ரவுண்டாணாவில் இருந்து ஜி.சி.டி கல்லூரி மற்றும் தடாகம் ரோடு என்.எஸ்.ஆர் ரோடு சந்திப்பு (அவிலா கான்வென்ட்) வரையும், பாரதி பார்க் ரோடு, ராஜா அண்ணாமலை ரோடு சந்திப்பில் இருந்து ஜி.சி.டி கல்லூரி ரவுண்டாணா வரையும் அனைத்து தனியார் மற்றும் பொது வாகனங்கள் தடை செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.













Click it and Unblock the Notifications