கோவை இளைஞர்களுக்கு குட்நியூஸ் .. வரும் நவம்பர் 15ம் தேதி முக்கியமான நாள்
கோவை: கோவையில் வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 15-ந்தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் தான் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுகிறது. இதன்படி வருகிற 15-ந்தேதி காலை 10 மணிமுதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2, பட்டபடிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.
பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணி காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனடியாக வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த முகாமில் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்கள், மனுதாரர்கள் www.tnprivate jobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications