பாலியல் தொல்லையால் கோவை மாணவி தற்கொலை.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கோவை: கோவை மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தொடர்ந்து அளித்த பாலியல் தொல்லையால் 16 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்த புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,

பாலியல் தொல்லை
ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடுமையாக மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி 6 மாதங்களுக்கு மேலாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவருடன் படித்த மாணவர்கள் கூறுகின்றனர்.

கைப்பட எழுதிய கடிதம்
இந்தச் சூழலில் கடந்த நவம்பர் மாதம் கோவை மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது. அந்த மாணவி உயிரிழக்கும் முன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

கைது
இதையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், மாணவி புகார் அளித்த பின்னரும், அலட்சியமாக இருந்துவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டம்
இந்தச்சூழலில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் பாய்ந்ததன் காரணமாக அடுத்த ஓராண்டுக்கு அவரால் சிறையிலிருந்து வெளி வர முடியாது
-
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications