பொன் மாணிக்கவேலுக்கு விடாமல் ஆதரவு தரும் எச். ராஜா.. என்ன காரணம்?
Recommended Video

கோவை: சிலைத் திருட்டு வழக்குளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எச். ராஜா விடாமல் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார். இது சலசலப்புகளையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்துள்ள ஒரு பேட்டியில், பொன் மாணிக்கவேல் நடவடிக்கையெல்லாம் சரி. ஆனால் அவர் ஏன் இதுவரை ஒரு அர்ச்சகரைக் கூட கைது செய்யவில்லை. அவரை யாரேனும் மத ரீதியாக பின்னணியில் இருந்து இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது என்று கேட்டுள்ளார்.
பொன் மாணிக்கவேல் குறித்து இப்போது எதிர்மறை கருத்துக்களும் அதிகரித்து வரும் நிலையில் பொன் மாணிக்கவேலை தொடர்ந்து எச். ராஜா மட்டும் விடாமல் தீவிரமாக ஆதரித்துப் பேசி வருவதும், டிவீட் போட்டு வருவதும் விவாதத்துக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் எச். ராஜா பேசியுள்ளார்.

மக்களிடம் தான் கேட்க வேண்டும்
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டவர் நேர்மையானவரா என்பது குறித்து மக்களிடம் தான் கேட்க வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் பின்புலத்தில் யாரோ இருக்கின்றனர். புகார் அளித்த காவல்துறை அதிகாரிகளின் பொருளாதாரத்தை சோதனை செய்ய வேண்டும்.

சிலைகளை திருடுவதற்கு தான்.
கோவை மாதம்பட்டியில் பூஜைகள் நடைபெறாமல் உள்ள ஒரு கோவிலை 2015லிருந்து புனரமைக்க அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை கைவிடப்படுவதே சிலைகளை திருடுவதற்கு தான்.

நடராஜர் , சிவகாமி சிலைகள்
அரியலூர் சுத்தமள்ளி ஊரில் உள்ள நடராஜர் , சிவகாமி ஆகிய இரு சிலைகள் நியூயார்க்கில் உள்ளது. எப்படி சென்றது? அங்குள்ள சிவன் கோவிலில் உள்ள 10 சிலைகள், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் இருந்த 8 சிலைகள் 45 ஆண்டுகளாக பூஜை செய்யாமல், பூட்டப்பட்ட நிலையில், 2007 ல் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை திறந்து புகைப்படம் எடுத்த அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் கொள்ளை நடந்து 18 சிலைகள் திருடப்பட்டு நியூயார்க் சென்றது. அந்த வழக்கில் தான் ஜெர்மனியில் இருந்த சுபாஷ் கபூர், தீனதயாளான், சஞ்சீவி அசோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஊழல் நிறைந்தது
பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் 300 கோடிக்கும் மேற்பட்ட சிலைகள் காப்பக்கத்தில் இருந்த சிலைகளை போலி செய்த வழக்கில் அதிகாரி கஜேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்தினால் மொத்த துறையையும் ஊழல் நிறைந்தது என்பது தானே அர்த்தம்.

50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில்
கவிதா, திருமகள் சிலை திருடர்கள் என்பதை ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டதால் தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம் என்பதால், அதை மீட்பவரை ஊக்கம் கொடுக்க வேண்டுமே தவிர சந்தேகப்படக்கூடாது என்றார் எச். ராஜா.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications