Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொள்ளை போகும் மேற்குத் தொடர்ச்சி மலை வளங்கள்.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் ஜல்லிக் கற்கள் மற்றும் சட்டவிரோத செங்கல் சூளைகளுக்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத அதிகாரிகளை சிறப்பு பெஞ்ச் கடுமையாக சாடியுள்ளது.

கோவை மாவட்டத்தின் அழகே மேற்கு தொடர்ச்சி மலைதான். இந்நிலையில், மலையின் அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கரை, ஆலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக செம்மண் எடுக்கப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், வழக்கறிஞர் புருஷோத்தமன் சட்ட விரோத மண் கடத்தல் குறித்த வீடியோ ஆதாரங்களுடன் நீதிபதிகள் சதிஷ் குமார் மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

coimbatore western ghats

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் மண் எடுக்கப்படும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், கலெக்டருக்கு பதிலாக கனிமவளத் துறை உதவி இயக்குநர் அங்கு ஆய்வு செய்ததோடு, ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. பின்னர், மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கனிமவள துறை உதவி இயக்குநர் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்று கூறி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இப்படியே போனால் மேற்குத் தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்று தெரிவித்தனர். சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிடில் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும். இந்த செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும், மணல் எடுக்க பயன்படுத்தும் இயந்திரங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டு, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பேரூர், தடாகம் பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். முறைகேடு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், தடை செய்யப்பட்டுள்ள செங்கல் சூளைகளில் உரிய அனுமதியின்றி கைகளால் செங்கல் தயாரிப்பதை தடை செய்திட சூளைகளை சீல் வைக்கவு வருவாய்த் துறை, காவல் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கோவையில் ஜல்லிக் கற்கள், சட்டவிரோத செங்கல் சூளைகளுக்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத அதிகாரிகளை சிறப்பு பெஞ்ச் கடுமையாக சாடியுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் எஸ்பி சொக்கலிங்கம், எம்.புருஷோத்தமன் ஆகியோர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட பிறகும் சில சட்டவிரோத செங்கல் சூளைகள் செயல்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். புருஷோத்தமன், ஜல்லிக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட அளவைக் காட்டும் புகைப்படங்களையும் சமர்ப்பித்தார். மாவட்ட ஆட்சியர் அறிக்கையின்படி, ஆலந்துறை, தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டினம், கரடிமடை ஆகிய கிராமங்களில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் ரிசர்வ் வனப் பகுதிகளில் மலைகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து ஜல்லி கற்கள் கொள்ளையடிக்கப்படுவதையும், கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செங்கல் சூளைகளை நடத்துவதையும் தடுக்கும் நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கோவை மாவட்ட நீதிபதி சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வளவு பெரிய அளவில் மண் வெட்டி எடுத்துச் செல்லப்படும்போது, மண் எடுக்கப்பட்ட இடத்தைக் கண்டறிவது கடினம் அல்ல. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதைக் காண்கிறோம். எனவே, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அதிகாரிகளை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது மண் கடத்தப்பட்ட இடத்தை அடையாளம் காண முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தாக்கல் செய்த ஆய்வு மற்றும் அறிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் சுதந்திரமான ஆய்வு தேவை என்று கருதியது.

கோவையில் உள்ள நிரந்தர லோக் அதாலத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான நாராயணன், இந்தப் பகுதிகள் மற்றும் 14 சட்டவிரோத செங்கல் சூளைகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடுகிறோம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு உத்தரவிட்டது. சுரங்கத் துறை உதவி இயக்குநர், மாவட்ட வன அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வுக்கு மாவட்ட நீதிபதியுடன் செல்ல வேண்டும்.

அந்த இடங்களை வீடியோகிராஃப் செய்யவும், உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் கிராம மக்களை ஆய்வு செய்து அக்டோபர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+