இப்ராஹிம் வீட்டில் ஒரே அதிர்ச்சி.. கோழிக்கூண்டிற்குள் "சிறுத்தை" வந்தது எப்படி.. வெலவெலத்த வால்பாறை
கோழிக்கூண்டில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்த நிலையில் விசாரணை நடக்கிறது
கோவை: கோழி கூண்டிற்குள் எப்படி சிறுத்தை வந்தது? என்ற பெருங்குழப்பத்தில் வால்பாறை வனத்துறையினர் ஈடுபட்டு வருகினற்னர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறையை சேர்ந்தவர் இப்ராகிம்.. 45 வயதாகிறது. இவர், தன்னுடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தார்.. இதற்காக வீட்டின் பின்புறம் கோழிக்கூண்டு வைத்துள்ளார்.
தினமும் காலையில் கோழிகளுக்கு இரை போடுவதற்காக வீட்டின் பின்பக்கம் இப்ராகிம் செல்வது வழக்கம்.. அப்படித்தான் காலை இப்ராகிம் அங்கு சென்றிருக்கிறார்..

கோழி கூண்டு
ஆனால், கோழிக்கூண்டில் கோழிகளை காணவில்லை.. மாறாக சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது... இதனால் அதிர்ச்சியான இப்ராஹிம், உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்... வனத்துறையினரும் இப்ராஹிம் வீட்டுக்கு வந்தனர்... அங்கு இறந்து கிடந்த சிறுத்தையை பார்த்தனர்... அப்போது சிறுத்தையின் நகங்கள் கோழிக்கூண்டின் இரும்பு கம்பியில் சிக்கியவாறு கிடந்தது..

கோழிகூண்டில் சிறுத்தை
மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏதாவது இருக்கிறதா என்றும் பார்த்தனர். உடலில் எங்குமே சிறுத்தைக்கு காயங்கள் இல்லை.. இதனால் வனத்துறையினர் குழம்பி விட்டனர்.. சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியாமல் திகைத்தனர்.. பிறகு, விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான் இப்ராஹிமிடம் சந்தேகம் திரும்பியது.. அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை சொன்னார்.. இதனால் மேலும் குழம்பி போன வனத்துறையினர், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்..

இப்ராஹிம்
கடந்த சில நாட்களாகவே, இப்ராஹிம் வீட்டில் வளர்த்து வந்த கோழிகள் தினமும் காணாமல் போய் கொண்டிருந்ததால், கடுமையான மனஉளைச்சலிலும் அதிர்ச்சியிலும் இப்ராஹிம் இருந்தாராம்.. இதையடுத்து இப்ராஹிம் மீது சந்தேகம் வலுத்துள்ளது.. கோழிகள் தினமும் காணாமல் போவதால் இப்ராஹிமே கோழிக்கூண்டில் கரண்ட் வைத்திருந்தாரா? அதன் காரணமாகவே சிறுத்தை இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம்
கால்நடை டாக்டர்களை வரவழைத்து, சிறுத்தையை போஸ்ட் மார்ட்டம் செய்யும் பணி துவங்கி உள்ளது.. அந்த ரிசல்ட் வந்தால்தான், சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும்.. எனினும் கோழி கூண்டில் சிறுத்தை கிடந்தது வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல, அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்ததால் பயந்து கொண்டு, மக்கள் வீட்டிலேயே உறைந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications