கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: கோவை ஆறுமுகசாமி மகன் செந்தில்குமாரிடம் இன்றும் விசாரணை
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் இன்றும் விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்த கொலை, கொள்ளை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய பலரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.
இக்கொலை, கொள்ளைகள், மர்ம மரணங்கள் பின்னணி குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் பின்னணியில் உள்ள அரசியல் புள்ளிகள் குறித்தும் பூடகங்கள் மட்டுமே பேசுபொருளாகி இருந்தன.

இந்நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவ்வழக்கில் தற்போது மறு விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இவ்வழக்கில் ஏற்கனவே சிக்கிய சஜிவன் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டன.
இந்நிலையில் திடீரென கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கொடநாடு பங்களாவை பராமரிக்கும் பணியை முன்னர் செந்தில்குமார் நிறுவனம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில்தான் அவர் விசாரணைக்கு வர வேண்டும் என்று தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த சம்மன் அடிப்படையில் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை முன்பு கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் நேற்று செந்தில்குமார் ஆஜரானார். அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications