அதிமுக தனபால் வீட்டுக்குச் சென்ற எல்.முருகன்! தொபுகடீர்னு காலில் விழுந்த அவிநாசி பாஜக வேட்பாளர்
அவிநாசி: அவிநாசி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள தனபாலை நேரில் சந்தித்த அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். தனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த தனபால் நெகிழ்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலில் அவிநாசி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு, அதிமுக மூத்த தலைவர் மற்றும் அவிநாசி தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்தவருமான மதிப்பிற்குரிய அண்ணன் .P. தனபாலை நேரில் சந்தித்து ஆசி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.

அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு. சேவூர் G வேலுச்சாமி அவர்கள் உடனிருந்தார். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவிநாசி தொகுதியின் எம்எல்ஏவாக இரு முறை வென்றவர் தனபால், இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சபாநாயகராகவும் இருந்தார்.
இந்த முறை அவிநாசி தொகுதியில் போட்டியிட தனபால் அதிமுகவில் வாய்ப்பு கேட்ட நிலையில் அந்த தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. தன்னிடம் இந்த தகவலை கூட அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் சொல்லவில்லை என தனபால் வருத்தமடைந்தார். மேலும் தனக்கு மரியாதையும் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தனபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய 1972 ஆம் ஆண்டிலிருந்து நான் என்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கழகப் பணியாற்றி வருகிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1977-80, 1980-84 மற்றும் 1985-88 என தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றி இருக்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பின்பு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டவன் .
2001-2006, 2011-2016, 2016-2021 மற்றும் 2021-2026 என நான்கு முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2001-2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
காலகட்டத்தில், ஆதி திராவிடர் நலன், உணவு, கூட்டுறவு போன்ற இலாக்காக்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் என்னை அமைச்சராக நியமித்தார்கள்.
2011 ஆம் ஆண்டு என்னை பேரவைத் துணைத் தலைவராக்கிய மாண்புமிகு அம்மா அவர்கள், 2012 ஆம் ஆண்டு பேரவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினார்கள்.
2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பேரவைத் தலைவர் பொறுப்பினை மாண்புமிகு அம்மா அவர்கள் எனக்கு வழங்கினார்கள். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன் நான்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நீண்ட நாட்கள் பேரவைத் தலைவர் பதவியை வகித்தவன் என்ற பெருமையை எனக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் வழங்கினார்கள். இதனை நினைக்கும்போது எனது நெஞ்சம் நெகிழ்கிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு, அதிமுக மூத்த தலைவர் மற்றும் அவிநாசி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்தவருமான… pic.twitter.com/Rcnws9WQtt
— Dr.L.Murugan (@DrLMurugan) April 5, 2026
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யாரும் வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலம் விசாரிக்கவோ இல்லை.
இந்தத் தருணத்தில், 1988 ஆம் ஆண்டு எனக்கு விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டபோது சம்பவ இடத்திற்கு நேரில் வந்து எனக்குத் தேவையான முதலுதவியை அளித்து என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாண்புமிகு அம்மா அவர்களை நினைத்துப் பார்த்தேன். என் கண்களில் நீர் ததும்புகிறது. அந்தத் தாயின் கருணைக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள். தாயில்லாத நிலையை நான் இப்போது உணர்கிறேன்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன் என்பது உண்மை. ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை.
உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் என்னுடைய மகன் திரு. லோகேஷ் தனபால் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
என்னைப் பொறுத்த வரையில், எனக்கு ஆதியும், அந்தமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்". இவ்வாறு தனபால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனபாலின் வீட்டுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.முருகன் நேரில் சென்றார். அங்கு தனபாலுக்கு பொன்னாடை போர்த்தி அவரது காலிலும் விழுந்து ஆசி பெற்றார்.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications