கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு!
Recommended Video
கோவை: சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல்களுக்கு சரதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த நாசாகர செயலை நடத்தியுள்ளனர்.

அலட்சியமாக இலங்கை
இது தொடர்பாக இலங்கைக்கு முன்னரே இந்திய புலனாய்வு ஏஜென்சி எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனாலும் இலங்கை அரசு அலட்சியமாக இருந்தது. கோவை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய சோதனைகளின் போது இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாம்
இந்நிலையில் இலங்கைக்கு சென்ற இந்திய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், சஹ்ரான் குழுவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்தனர். மேலும் இலங்கையிலும் அந்த குழு விசாரணை நடத்தியது.

கோவையில் சோதனை
இதனைத் தொடர்ந்து இலங்கை தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருடனான தொடர்புகள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் அன்புநகர் உட்பட 7 இடங்களில் இன்று புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது பகல் 2 மணிவரை நடைபெற்றது.

4 பயங்கரவாதிகள் கைது
சஹ்ரான் நடத்தி வந்த தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தினரும் கோவை சந்தேக நபர்களுக்குமான தொடர்புகளை உறுதி செய்த பின்னர் இச்சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சோதனையின் முடிவில் 4 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தற்போது துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட் டிஸ்க், 13 சிடி-டிவிடிகள், 300 ஏர் கன் குண்டுகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications